districts

குறைந்தபட்ச ஊதியம் வழங்க மறுப்பு: 2 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி, ஜூன் 5-  நெல்லை  மாவட்டத்தில் குறைந் தபட்ச ஊதியம் வழங்காத 2 நிறுவனங்கள் மீது தொழிலாளர்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

இது  குறித்து நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப் பிரசன்னா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது-மே மாதத்தி ற்கான குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட் போன்றவற்றில் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது தொடர்பாக திருநெல் வேலி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆட்சி எல்லைக்குட்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சிறப்பாய்வு மேற் கொண்டனர்.

குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் 35 நிறுவனங்களில் சிறப் பாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், குறைந்த பட்ச ஊதியம் வழங்காத 2 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அதன் மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் அந்நிறுவனங்களில் பணிபுரி யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் -நிலுவைத் தொகை ரூ.52 ஆயிரத்து 686 வழங்கக் கோரி 3 கேட்பு  மனுக்கள்  நெல்லை இணை ஆணையர் அலு வலகத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளன. இதன் மூலம் 16 தொழிலாளர்கள் பயன்பெறு வர்.

இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மரம்  வளர்ப்போம்! சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்!