நெல்லை,செப்.8- 805 கோவில்களுக்குச் சொந்த மான 6 ஆயிரத்து 853 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களி டம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள் 2250 கோவில்களில் குடமுழுக்கு நடத்தி முடிக்கப்படும் என்று நெல்லை யில் இந்துசமய அறநிலையத்து றை அமைச்சர் தெரிவித்தார். நெல்லை மாவட்டம் மானூரில் அமைந்துள்ள பழமையான அம்ப லவாணர் கோயிலில் 112 ஆண்டு களுக்குப் பின் செப்டம்பர் 8 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. \
இவ்விழாவில் பங்கேற்ற அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது; ஆயிரம் ஆண்டு களுக்கு மேல் பழமையான 32 கோயில்களில் குடமுழுக்கு நடை பெற்றுள்ளது. தமிழ்நாடு முத லமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் 2098 திருக்கோயில்களில் திருப்பணி கள் மேற்கொள்ளப்பட்டு குட முழுக்கு நடத்தப்பட்டுள்ளது. மானூர் அம்பலவாணர் கோயில் உள்பட 55 திருக் கோயில்களில் ஞாயிறன்று குட முழுக்கு நடைபெற்றுள்ளது.
தொன்மையான திருக்கோயில் களுக்கு திருப்பணி செய்து குட முழுக்கு நடத்தவும், தேர்களை பாதுகாக்க கொட்டகைகள் அமைக்கவும், கோயில் குளங் களை பாரமரித்து பாதுகாக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அம்பலவாணர் கோயிலுக்கு சொந்தமான நஞ்சை நிலம் 173 ஏக்கர், புஞ்சை நிலம் 28 ஏக்கர் கோயில் திருப்பணிக்காவும், நித்ய பூஜை செலவுகளுக்காவும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. திமுக ஆட்சி அமைந்த பின் திரு வட்டாறு போன்ற கோயில்கள் மட்டுமல்லாமல் உத்திரமேரூர் வரதராஜபெருமாள் கோயில் மற்றும் 300 ஆண்டுகளுக்கு மேலான கோயில்களிலும் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 2250 கோயில்களில் குடமுழுக்கு நடத்தி முடிக்கப்படும். 805 கோயில்களுக்கு சொந்தமான 6 ஆயிரத்து 703 கோடி ரூபாய் மதிப்புள்ள 6 ஆயிரத்து 853 ஏக்கர் நிலங்கள் திமுக ஆட்சியில் ஆக்கிர மிப்பாளர்களிடம் இருந்து மீட்கப் பட்டுள்ளது. மீட்கப்பட்ட இடங்களில் கோயில்களின் பெயர் களுடன் கூடிய பலகைகள் வைக்கப் பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் ரூ.92 கோடி யில் கோயில்களில் 47 புதிய ராஜ கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. கோயில்களுக்கு ரூ.59 கோடியில் புதிய மரத்தேர்கள் செய்யும் பணிகள் நடந்து வரு கிறது. ரூ.11 கோடியே 92 லட்சம் செலவில் பாரம்பரிய பழமை யான மரத்தேர்கள் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.