திருச்சிராப்பள்ளி, மார்ச் 27- திருச்சி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநர் அலுவலகத்தில் இரவு காவலர் பணியிடம் காலியாக உள்ளது. இது பொதுப்பிரிவு முன்னுரிமையற்ற பணியிடம் ஆகும். தமிழில் எழுத படிக்க தெரிந்த, 1.1.2023 அன்று 18 வயது பூர்த்தி யடைந்த 32 வயதுக்கு மிகாமல் உள்ளவர் கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு), மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அலுவலகம், நெ.16சி, வில்லியம்ஸ் ரோடு, மாவட்ட நல நிதிக் குழு வளாகம், திருச்சி 620 001 என்ற முக வரிக்கு ஏப்ரல் 10 மாலை 5 மணிக்குள் பதி வஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சி யர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.