districts

img

வாலிபர் சங்கத்தின் முப்பெரும் விழா

திருச்சிராப்பள்ளி, ஜூலை 1- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சி மாநகர் மணிகண்டம் ஒன்றியக் குழு  சார்பில் ரத்த தான முகாம், புதிய கிளை துவக்க விழா, அதிக மதிப்பெண் பெற்ற மாண வர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெ ரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றியச் செயலாளர் ஏழு மலை தலைமை வகித்தார். ஒன்றியத் தலை வர் மதியழகன் வரவேற்றார். ரத்த தான முகா மில் 31 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப் பட்டது. புதிய கிளை துவக்க விழாவில், சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா  சங்க கொடியை ஏற்றினார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேது பதி தகவல் பலகையை திறந்து வைத்தார். குளத்தூர் பஞ்சாயத்தில் 10, 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த  மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை  வழங்கி சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலா ளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்  மணிமாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேது பதி நிறைவுரையாற்றினார். பகுதி பொரு ளாளர் சூர்யா நன்றி கூறினார்.

;