தஞ்சாவூர், அக்.13- உலக வனவிலங்கு தின விழாவை முன்னிட்டு, தஞ்சாவூ ரில் குந்தவை நாச்சியார் அர சினர் மகளிர் கலைக் கல்லூரி சார்பில், மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா நுழைவாயிலில், குந்தவை நாச்சி யார் கல்லூரி முதல்வர் அ.ஜான் பீட்டர் தலைமையில், மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் தெ.மலர்விழி முன்னிலை வகித்தார். பேரணி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு அருங்காட்சியகத்தில் நிறைவடைந்தது. முன்னதாக கல்லூரி முதல்வர், வன அலுவலர், சிறப்பு விருந்தினர்கள் கருத்துரை யாற்றினர். ஊர்வலத்தின் முன்னே மாணவி கள் சிலம்பம் சுற்றியவாறு பங்கேற்றனர்.