பெரம்பலூர், மார்ச் 4- பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி யில் ஞாபகத்திறன், கற்றல் திறன், தேர்வு பயம் போக்கவும், மாணவர் கைகளில் ரோஜா மலர்களை வைத்து கொண்டு 21 நிமி டங்கள் ஆழ்நிலை தியானத்தில் அமர்ந்து, பதஞ்சலி உலக சாதனை செய்தனர். நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் டாக்டர் ஆ.ராம்குமார் தலைமை வகித்தார். 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங் கேற்ற யோகாவில் யோகா குருஜி கிருஷ்ண குமார் பயிற்சி அளித்தார். பள்ளி முதல்வர் கள் ஹேமா, சாரதா, சந்திரோதயம், தமிழா சிரியர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.