புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சியில் உலக மலேரியா தின விழிப்புணர்வு உறுதிமொழி பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ.கணேசன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் உத்தமன் முன்னிலையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.