districts

img

டிஆர்இயு-வின் வெற்றி: கொண்டாட்டத்தில் தொழிலாளர்கள்!

கோவை, டிச.13- ரயில்வே தொழிற்சங்க அங்கீ கார தேர்தலில், தட்சிண ரயில்வே எம்ப் ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) - சிஐ டியு வெற்றி பெற்ற நிலையில், வெற்றிக் கொண்டாட்டத்தில் சிஐ டியு மற்றும் தொழிலாளர்கள் ஈடு பட்டனர். ரயில்வே தொழிற்சங்க அங்கீ கார தேர்தல் டிச.4 முதல் 6 ஆம்  தேதி வரை மூன்று நாட்கள் நடை பெற்றது. இதில் சிஐடியு தொழிற் சங்க ரயில்வே ஊழியர்கள் அமைப் பான டிஆர்இயு நட்சத்திரம் சின் னத்தில் போட்டியிட்டது. வாக்கு எண்ணிக்கை 12 ஆம் தேதி நடை பெற்றது. இதில், டிஆர்இயு 34 சத வீத வாக்குகளை பெற்று தொழிற் சங்க அங்கீகாரத்தில் வெற்றி பெற் றுள்ளது. எந்த கட்சி ஆளும் கட்சி யாக வருகிறதோ, அந்த கட்சிக்கு  ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து,  தொழிலாளர்களுக்கு விரோதமாக  செயல்பட்டு வந்த எஸ்ஆர்எம்யு தொழிற்சங்கத்திற்கு இத்தேர்த லில் ரயில்வே தொழிலாளர்கள்  நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர்.  டிஆர்இயு-வின் வெற்றி ஒவ் வொரு தொழிலாளர்களின் நேரடி யான வெற்றி என்கிற நிலையில், டிஆர்இயுவின் வெற்றியை சிஐடியு வினர் உற்சாகமாக கொண்டாடி  வருகின்றனர்.  இதன்ஒருபகுதியாக கோவை ரயில் நிலையத்தில், சிஐ டியு - டிஆர்இயு சார்பில், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் வெற்றியை  கொண்டாடினர்.  இந்நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே. மனோகரன், செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி, நிர்வாகிகள் கே.ரத்னகுமார், எம்.கே.முத்துக் குமார், சிபிஎம் மாமன்றக்குழு தலை வர் வி.இராமமூர்த்தி, டிஆர்இயு நிர் வாகிகள் ஈஸ்வரன், பிரின்ஸ் மற் றும் சிஐடியு, டிஆர்இயு-வைச்  சேர்ந்த திரளானோர் பங்கேற்ற னர். ஈரோடு ஈரோடு ரயில் நிலைய சந்திப் பில் டிஆர்இயு கோட்டச் செயலாளர் எம்.முருகேசன் தலைமையில் வெற்றி ஊர்வலம் நடைபெற்றது. இதில், மண்டல உதவி செயலாளர் கே.பிஜூ, சிஐடியு மாவட்டத் தலை வர் எஸ்.சுப்ரமணியன்,  செயலா ளர் எச்.ஸ்ரீராம்,  ரயில்வே சங்க நிர் வாகிகள் சிவக்குமார், ரவிக்குமார், ஜி.சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்பதிவு மையம் அருகில் தொடங்கிய வெற்றி ஊர் வலத்தில், பொதுத்துறையை பாது காப்போம், தொழிலாளர் விரோத போக்குகளுக்கு முடிவு கட்டுவோம் என முழக்கங்களை ரயில்வே தொழிலாளர்கள் ஆவேசத்துடன் எழுப்பினர்.