கும்பகோணம், மார்ச் 14- தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை குறித்து இழிவாகப் பேசிய பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்புவைக் கண்டித்து திமுக மகளிரணி சார்பில் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மகளிரணி அமைப்பாளர் சுபா திருநாவுக்கரசு தலைமை வகித்தார். இதில் மாநகர -மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.