districts

img

உயர் கல்வியில் பெண்கள் 36 சதவீதம் முன்னேறியுள்ளனர்

தஞ்சாவூர், பிப்.12 - தஞ்சாவூர் ஆட்சியர் அலுவல கத்தில் புதன்கிழமை தமிழ்நாடு மாநில  உயர்கல்வி மன்றம் அரசு பல்வகை  தொழில் நுட்பக் கல்லூரி ஆசிரியர் களுக்கான, புதிய பாடத்திட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பினை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “உயர்கல்வியில் இந்திய  அளவில் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. உயர்கல்வியில் பெண்கள் 36 சதவீதம் முன்னேறிய நிலையில், இது  சராசரியாக இருந்த விகிதாச்சார வளர்ச்சியை விட உயர்ந்துள்ளது. முதல்வரின் தனிக் கவனத்தால் பெண்  கல்வியில் மட்டுமில்லாமல், மற்ற உயர்கல்வியில் 38 சதவீதம் என்பதை  தாண்டி உயர்நிலையை தொட்டு உள்ளோம். அகில இந்திய அளவில் உயர்கல்வி  28 சதவீதம்தான் உள்ளது. இந்நிலை யில், 2030 ஆம் ஆண்டில் 50 சதவீதம்  அளவுக்கு எட்ட வேண்டும் என்பதுதான்  ஒன்றிய அரசின் இலக்காக உள்ளது. ஆனால் தமிழகம் உயர்கல்வியில் 48 சத வீதத்தை தொட்டுள்ளது. மேலும், இந்தியாவில் திறன் மேம்பாட்டில் பேசும்  அளவுக்கு தமிழகம் உயர்ந்துள்ளது. பி.ஹெச்.டி - இடஒதுக்கீடு... பி.ஹெச்.டி., படிப்பில் இட ஒதுக்கீடு  விவகாரத்தில் சிக்கல் இருப்பது உண்மைதான். பி.ஹெச்.டி., பட்டம்  பெற ஆண்டுக்கு எட்டு மாணவர்களை  நெறியாளர்கள் தேர்வு செய்கிறார்கள்.  அப்படி உள்ள சூழலில், போராசிரி யர்களின் எண்ணிக்கை, மாணவர்கள் தேர்வு, பல்கலைக்கழக பதிவுகள் என்ன  என்பதை ஆராய்ந்து, பி.ஹெச்.டி., படிப்பில் போதுமான இடஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பி.ஹெச்.டி., முடித்தவர்கள், அதைப் படித்து வருபவர்கள் எண்ணிக்கை நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகம் என்ற நிலை உள்ளது” என்றார்.