districts

img

மகளிர் சுயஉதவி குழு உற்பத்தி பொருட்களின் விற்பனைக் கண்காட்சி

புதுக்கோட்டை, அக்.21-  மகளிர் சுயஉதவி குழு உற்பத்தி பொருட்களின் விற்ப னைக்கான, மாவட்ட அளவிலான தீபாவளி சிறப்பு கட்டாய கண்காட்சியினை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.  மாவட்டத்தில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் அக்.21 முதல், 30 வரை 10 நாட்களுக்கு காலை 10 மணி  முதல், மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. 13 ஊராட்சி  ஒன்றியங்களைச் சேர்ந்த 90 மகளிர் சுயஉதவி குழுக்களால் 73 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.  ஈரோடு, தர்மபுரி, சிவகங்கை, நாகர்கோவில், திருச்சி, சேலம், மதுரை, இராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த சுயஉதவிக் குழுவினரும் பங்கேற்க உள்ளனர். தீபாவளி பண்டிகை சார்ந்த பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றார். மகளிர் திட்ட இயக்குநர் கே.ஸ்ருதி, உதவி திட்ட அலுவலர்கள் கே.கவியரசன், ஆசிர்வாதம், தில்லைமணி, மகாதேவி, சி.சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.