புதுக்கோட்டை, பிப்.6 - ஒன்றிய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்தத் சட்டத்தை எதிர்த்தும், அச்சட்டத்தை திரும்பப் பெறக் கோரி யும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் செவ் வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தினால் அதீதமான தண்டனைகள், ஆன்-லைன் அபராதம், வாகனவரி உயர்வு, இன்சூரன்ஸ் கட்டண உயர்வு என மோட்டார் தொழிலில் உள்ளவர் கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். எனவே, மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தைக் கண்டித் தும், சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், அதீதத் தண்டனைகள், அப ராதம், கட்டண உயர்வுகளைத் திரும்பப் பெறக் கோரியும் சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் செவ்வாயன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்துப் போக்கு வரத்துத் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) மாவட்டப் பொதுச் செயலாளர் க.ரெத்தினவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிஐ டியு மாவட்டத் தலைவர் க.முகமதலி ஜின்னா பேசினார். மாநிலச் செயலா ளர் ஏ.ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலை வர் கே.ஜெ.ஆர்.காதர் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா, பொருளாளர் இரா.மாலதி, துணைச் செயலாளர் எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஜெ.கர்ணன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் தலைமை அஞ்சலக அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஆட்டோ சங்க நகரத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி சிஐடியு மாவட்டத் தலை வர் கண்ணன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநிலப் பொருளா ளர் பா.பார்த்தசாரதி, சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் சாமிநாதன், ஆட்டோ சங்கம் தஞ்சை மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், நகரச் செயலாளர் கார்த்தி, தஞ்சை நகரச் செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
. அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை துணைத் தலைவர் கண்ணன் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்ட பொருளாளர் கண்ணன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாதர் சங்க மாவட்டச் செய லாளர் பத்மாவதி, சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சந்தானம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட துணைத் தலைவர் சிற்றம்பலம், மாவட்டச் செயலாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் மணி வேல் கண்டன உரையாற்றினார்.