திருச்சி மாவட்டம் தொட்டியம் பேரூராட்சி 10 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற வேட்பாளர் ஆர்.கலைச்செல்வி, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் கூட்டணி கட்சியினருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் 7 ஆவது வார்டில் திமுக வேட்பாளராக கோ.வரதராஜன் (49) போட்டியிட்டார். அவரை எதிர்த்து து.மு.கார்த்திகேயன் (அதிமுக), தே.தேவக்குமார் (பாஜக), வெ.பால்ராஜ் (நாதக), சி.மகேந்திரன் (விசிக) உட்பட எட்டுமுனைப் போட்டியில் பதிவான 1326 வாக்குகளில் 658 வாக்குகளைப் பெற்று சிறப்பான வெற்றியை பெற்றுள்ளார்.