கும்பகோணம், ஜன.11- தஞ்சாவூர் மாவட்டம் திரு விடைமருதூர் ஒன்றியத் திற்குட்பட்ட துக்காச்சி, திரு மலைராஜபுரம், வண்ணக் குடி ஆகிய போக்குவரத்து தொடர்பில்லாத கிராமப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறை பள்ளி ஆசிரியர்க ளுக்கு பேரிடர் காலத்தில் கற்றல் விளைவு குறித்து பயிற்சி வகுப்புகள் நடை பெறுகின்றன. கொரோனா தொற்றின் 3 ஆவது அலையை கருத்தில் கொண்டு, ஒரு வகுப்பில் 20 பேர் மட்டுமே அமர வேண்டும் என மாநில கல்வியியல் துறை திட்ட இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இருந்த போதிலும், அதனை பொருட் படுத்தாமல், ஒரு சிறிய அறை யில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரி யர்களை வைத்து போதிய இடைவெளி இல்லாமல் பயிற்சி கொடுக்கப்பட்டு வரு கிறது. இதுகுறித்து பயிற்சியில் ஈடுபடும் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: “கொரோனா பெருந் தொற்று காலத்தில் ஊரடங்கு, தனிமனித இடைவெளி என கட்டுப்பாடுகளோடு மக்க ளின் உயிர் காக்க அரசு முன் னெச்சரிக்கை நடவடிக்கை களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. இந்நி லையில், பேருந்துகளில் பள்ளிகளுக்கு வந்து செல்வதே ஆசிரியர்களுக்கு சவாலாக இருக்கிறது. இதில், ஆசிரியர்களுக்கு பயிற்சி என்னும் பெயரில் திருவிடைமருதூர் ஒன்றியத் திலும் போக்குவரத்து தொடர் பில்லாத கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரி யர்களை ஒரே இடத்தில் கூடச் செய்து பயிற்சி அளிக்கி றோம் என்று கூறி, ஆசிரி யர்களின் உயிரோடு விளை யாடுவது போன்ற நடவடிக் கையை கல்வித்துறை எடுப் பது, கொரோனா பெருந் தொற்றுக்கு வழிவகை செய் யவே வாய்ப்பாக இருக்கும். இத்தனை அவசரமாக இப்பயிற்சியை வழங்க வேண்டிய அவசியம் இப்போது ஏற்படவில்லை. மாணவர்களுக்கு அடிப்ப டைக் கல்வியையே முறை யாக கற்பிக்கும் சூழல் இன்னும் முழுமை அடையா மல் இருக்கும் சூழலில், கற்றல் விளைவுகள் குறித்த பயிற்சிக்கு இத்தனை அவ சரம் ஏன் காட்ட வேண்டும் என்பதுதான் கேள்வியை எழுப்புகிறது. ஒவ்வொரு குறுவள மையத்திற்கும் ஒரு பயிற்சி யாளரை தேர்வு செய்து, பயிற்சிக்கான கருத்தாளர் களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, ஆசிரியர் களுக்கு அவர்களது குறுவள மையத்திற்கு உட்பட்ட எல்லைக்குள் பயிற்சியை வழங்குவது ஒன்றே சரியான நடவடிக்கையாக இருக்க முடியும். இதன் காரணமாக பயிற்சி இன்னும் 10 நாட்கள் தள்ளிப் போனாலும் அத னால் குறை ஒன்றும் ஏற்படப் போவதில்லை. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற் சியினை கையேடு வடிவில் தயாரித்து வழங்கும் நடவ டிக்கைகளைகூட மேற் கொள்ளலாம். அதனை விடுத்து, கருத்தாளர்கள் குறைவாக இருக்கின்றார் கள் என்பதற்காக, ஒரு ஒன்றி யத்தில் பணியாற்றும் அத்தனை ஆசிரியர்களையும் ஒரே இடத்தில் கூடச் செய்வ தும் 10 நாட்களுக்கு தினந்தோ றும் பேருந்துகள் தொடர்பில் லாத கிராமப் பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளில் பங்கேற்க செய்வதும், ஆசிரியர்களின் உயிரோடு விளையாடும் செயலன்றி வேறில்லை. இது சம்பந்தமாக மாநில கல்வியாளர்கள் சங்கமம் சார்பில் சம்பந்தப்பட்ட பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு தகவல் தெரி வித்தோம். எனவே இதில் உடனடியாக அமைச்சர் தலையிட்டு உரிய நடவ டிக்கை எடுத்து, பயிற்சி யினை ஒத்திவைக்க வேண் டும். தக்க ஏற்பாடுகள் செய்த பின்பு பயிற்சிக்கான முன்னெடுப்புகளை மேற் கொள்ள வேண்டும்.” இவ்வாறு ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேற்கண்ட கோரிக்கையை பள்ளிக் கல்வித்துறை பரி சீலிக்குமா...?