ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு நீர் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுமா?
கரூர், அக்.29 - கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் வழி யாக கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் நொய் யல் ஆறு கலக்கிறது. இந்த நொய்யல் ஆற்றில் திருப் பூர் சாயக்கழிவு நீர் கலந்து விவசாய நிலங்களில் விவசா யம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசா யிகளுக்கு பசுமை தீர்ப்பா யம் அறிவித்த இரண்டாவது நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி கரூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட் டத் தலைவர் கா.கந்தசாமி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங் கினார். இந்த மனு குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கரூர் மாவட்ட அலுவலகத்தில் இருந்து கிடைத்த தகவலில், “மேற் கண்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தங்களிடம் குறிப்பு ஏதும் இல்லை. மாசு கட்டுப் பாட்டு வாரியம் திருப்பூர் வடக்கு அலுவலகத்திற்கு உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை கரூர் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் உரிய நட வடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசா யிகளுக்கு நிவாரணத் தொகை கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
மல்லிப்பட்டினம் மீன் ஏலக்கூடத்தில் வெளி மாவட்ட மீன்களை விற்க தடை
விசைப்படகு, நாட்டுப்படகு சங்கம் தீர்மானம்
தஞ்சாவூர், அக்.29- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டி னம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் உள்ள மீன் ஏலக்கூடத்தில் சுகாதார கார ணங்களால் வெளிமாவட்ட மீன்களை கொண்டு வந்து விற்பனை செய்ய தடை விதிப்பது என விசைப்படகு, நாட்டுப் படகு உரிமையாளர்கள் சங்கம் தீர்மா னம் நிறைவேற்றியுள்ளது. மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட் டம் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர் சங்கங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம், தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்டச் செயலாளர் வடுகநாதன் தலைமையில் நடைபெற்றது. விசைப் படகு, நாட்டுப்படகு சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், “மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் உள்ள இரு பகுதிகளான மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் மீன் ஏலக் கூடத்தில், கடலிலிருந்து பிடித்து வந்து உடனடியாக மீன்கள் விற்பனை செய்யப் படுகின்றன. இதற்கிடையே, வெளி மாவட்டங்களில் இருந்து ஏற்கனவே பிடிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்ட, சுகா தாரமற்ற மீன்களை கொண்டுவந்து விற்பனை செய்வதால் சுகாதாரக் கேடும், நோய்த்தொற்று ஏற்படும் அபா யமும் உள்ளது. இதனால் மல்லிப்பட்டினம் துறை முகப் பகுதிகளில் பிடித்து வரும் மீன்கள் குறைவான விலைக்கு விற்பனையா கின்றன. எனவே, வெளிமாவட்ட மீன்களை விற்பனை செய்ய அனுமதிப்ப தில்லை. மீறி விற்பனைக்கு கொண்டு வந்தால் மீன்வளம், சுகாதாரத் துறை, காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், காலை 8 மணியுடன் மீன் ஏலக்கூடத்தில் விற்பனை முடிந்து விடுவதால், அதற்கு பிறகு பிடித்து வரும் மீன்களை முறையான விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. மல்லிப்பட்டினம் கிழக்கு கடற் கரை சாலையில் மீன் ஏலக்கூடம் அமைத்து தர மீன்வளத்துறை மூலம் தமிழக அரசை கேட்டுக் கொள் கிறோம்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் விசைப்படகு, நாட்டுப் படகு உரிமையாளர்கள், சங்க நிர்வாகி கள், உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர்.
கட்டுமான சங்க பேரவை
திருச்சிராப்பள்ளி, அக்,29 - கட்டுமான சங்கத்தின் திருச்சி மாவட்டம் உப்பி லியபுரம் ஒன்றிய பேரவை கொப்பம்பட்டி யில் ஞாயிறன்று நடை பெற்றது. கூட்டத்திற்கு ஒன்றி யச் செயலாளர் செல்வ குமார் தலைமை வகித் தார். ஒன்றியத் தலைவர் ரவி முன்னிலை வகித் தார். கூட்டத்தை தளுகை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் முத்துக் குமார் துவக்கி வைத்தார். கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் பூமாலை சிறப்புரையாற்றினார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். செயலாளராக செல்வ குமார், தலைவராக பி.ரவி, பொருளாளராக பி.துரைராஜ், துணைத் தலைவராக குமார், துணைச் செயலாளராக ஜான்சி உள்பட 15 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ் நிறைவுரையாற்றினார்.
ரத்த தான முகாம்
அறந்தாங்கி, அக்.29 - புதுக்கோட்டை மாவட் டம் கோட்டைப்பட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கிளை மற்றும் அறந் தாங்கி அரசு மருத்துவ மனை இணைந்து ரத்த தானம் முகாமை கோட் டைப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடத்தின. முகாமிற்கு மாவட்டப் பொருளாளர் சித்திக் ரகுமான் தலைமை வகித் தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் 37 யூனிட் ரத்தத்தை கொடையாக வழங்கினர். இவை அறந் தாங்கி அரசு மருத்துவ மனைக்கு வழங்கப்பட்டன. ரத்தம் வழங்கிய கொடையாளர்களுக்கு அறந்தாங்கி அரசு மருத் துவமனை ரத்த வங்கி அலுவலர் மரு.ராதா கிருஷ்ணன் சான்றிதழ் வழங்கினார்.
குறைதீர் கூட்டத்தில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்
பெரம்பலூர், அக்.29 - பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் அக்.27 அன்று ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் நடைபெற்றது. அப்போது, விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் தலை வரும், விடுதலை போராட்ட வீரரும், தகைசால் தமிழர் விருது பெற்றவருமான தோழர் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின் அறிவித்தார். இந்நிலையில், தோழர் சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவப்படுத்துவது என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் செனட் மற்றும் சிண்டிகேட் குழு வில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான கோப்புகள், ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. ஆனால் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. கௌரவ டாக்டர் பட்டத்திற்கு ஒப்புதல் வழங் காத ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து குறைதீர் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
தஞ்சாவூர் ,அக்.29- பேராவூரணியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உடற்பயிற்சி, உடல்நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சைக்கிள் ஓட்டுவதால் உடலுக்கு உண்டாகும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், ‘ழ’ சைக்கிள் கிளப் சார்பில் வாரத்தில் 2 நாட்கள் சனி மற்றும் ஞாயிறு அதிகாலை நடைபெறவுள்ள விழிப் புணர்வு சைக்கிள் பேரணி துவக்க விழா ஞாயிறன்று நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் அருகே தொடங்கிய பேரணி, சேதுசாலை வழியாக குருவிக்கரம்பை கை காட்டி வரை சென்று தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேர ணியை பேரூராட்சி தலைவர் சாந்திசேகர் தொடங்கி வைத்தார். சைக்கிள் கிளப் இணைச்செயலாளர் முத்துக்கிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் அருண், குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மனோ கரன், செயலாளர் நீலகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தனியார் நூற்பாலையில் தீ விபத்து
திருவில்லிபுத்தூர், அக்.29- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மதுரை சாலையில் மேலபாட்டம் கரி சல்குளத்தில் தனியாருக்கு சொந்தமான ஸ்ரீ ராமலிங்கா ஸ்பின்னிங் மில் என்ற நூற் பாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், சனிக் கிழமை வழக்கமாக பணி களை தொழிலாளர்கள் மேற்கொண்டிருந்தபோது, பஞ்சு பிரிக்கக்கூடிய இயந் திரத்தின் மூலம் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதுகுறித்து இராஜ பாளையம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரி விக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து தீ அதிக அளவில் பரவியதால் தீயை அணைக்க முடியாமல் திரு வில்லிபுத்தூர், சிவகாசி உள்ளிட்ட பகுதியிலிருந்து மேலும் 8 தீயணைப்பு வாக னங்கள் வரவழைக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட தீய ணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
பெண்களின் தனியுரிமையை பறிக்கும் விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் செயல்
சிஐடியு கண்டனம் விருதுநகர், அக்.29- கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய் மார்கள் வந்து செல்லும் அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி பெண்களின் தனியுரிமையைப் பறிக்கும் வகையில் விடாப்பிடியாக நடந்து கொள்ளும் விருதுநகர் மாவட்ட ஆட்சிய ரின் செயலை சிஐடியு வன்மையாக கண் டித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா, மாவட் டத் தலைவர் எம்.மகாலட்சுமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், விருதுநகர் மாவட்டத்தில் 1504 அங்கன்வாடி மையங்கள் செயல்படு கிறது. இந்த மையங்களுக்கு சுமார் 20 ஆயி ரம் குழந்தைகள், 8 ஆயிரத்திற்கும் மேற் பட்ட கர்ப்பிணிப் பெண்கள், 10 ஆயிரத்திற் கும் மேற்பட்ட தாய்மார்கள் வந்து செல் கின்றனர். முழுக்க, முழுக்க பெண்களும் குழந்தை களும் மட்டுமே வந்து செல்லும் இந்த மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால் இந்த பெண்களின் தனி யுரிமை பாதிக்கப்படும் என சிஐடியு-அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத் தின் சார்பில் பல கட்ட போராட்டம் நடத்தப் பட்டது. ஆனாலும், விருதுநகர் மாவட்ட ஆட்சி யர் அவரது நிலையை மாற்றிக் கொள்ள வில்லை, ஆகவே சமூகநலத்துறை அமைச் சர், இளைஞர் நலன் மற்றும் விளையாட் டுத்துறை அமைச்சர், மற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்களி டம் மனுக் கொடுத்து சங்கத்தின் சார்பில் பேசப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த அக்.27 அன்று இரவு 9.30 மணிக்கு மீண்டும் விருது நகரில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனிடம் சங்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, வருவாய்த்துறை அமைச் சர், சங்க நிர்வாகிகள் முன்பு திட்ட அலு வலரிடம் பேசினார். கோரிக்கைகளை அக்.28 காலை 11 மணிக்குள் பேசி முடிக்க உத்தரவிட்டதோடு, ஊழியர்களை இட மாற்றம் செய்யும் உத்தரவையும் நிறுத்தி வைக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். இதன்படி அக்.28 அன்று திட்ட அலுவலரி டம் சிஐடியு சங்க நிர்வாகிகள் பேச்சு வார்த்தைக்கு சென்றனர். அப்போது வரு வாய்த்துறை அமைச்சர் கூறிய அறிவுரை களையும் மாவட்ட ஆட்சியர் ஏற்கவில்லை எனவும், அங்கன்வாடி திட்டத்தை முடக்கும் நிலையை ஏற்படுத்தி வருவதும் தெரிய வந் தது. எனவே, மாவட்ட ஆட்சியரின் இந்த நட வடிக்கையை சிஐடியு வன்மையாக கண் டிக்கிறது. மேலும், தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல் பட்டு வரும் விருதுநகர் மாவட்ட ஆட்சிய ரின் இத்தகைய நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.
நவீன அரிசி ஆலைகளை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது!: சிஐடியு வலியுறுத்தல்
திருவாரூர், அக்.29 - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) திரு வாரூர் மண்டல பொதுக்குழு கூட்டம் திருவா ரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பின் மண்டல தலைவர் சி.ஆர்.அண்ணாதுரை தலைமை வகித்தார். மாநிலத் தலைவரும் சிஐடியு மாநில உதவி பொதுச் செயலாளருமான வி.குமார் துவக்க உரையாற்றினார். மண்டல செயலா ளரும், மாநில துணை பொதுச் செயலாளரு மான ஆர்.மோகன் வேலையறிக்கை வாசித் தார். முன்னதாக மாநிலச் செயலாளர் என்.ராசப்பன், மாநில துணைச் செயலாளர் கே. சண்முகம், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி. முருகையன், தலைவர் எம்.கே.என்.அனிபா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மண்டல தலைவராக சி.அண்ணாதுரை, செயலாளராக ஆர்.மோகன், பொருளா ளராக கே.எஸ்.ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 2013 முதல் 2016 வரை பணியில் சேர்ந்த பருவகால பணியாளர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அமுதம் ரேசன் கடைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றி, நுகர்பொருள் வாணிபக் கழகத்தினை சீர ழிக்கும் முயற்சியை கைவிட வேண்டும். கொள் முதல் செய்த நெல் மூட்டைகளை 48 மணி நேரத்தில் இயக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் உடனே கூலி உயர்வு வழங்க வேண்டும். நவீன அரிசி ஆலைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
ரயில் தாமதத்தால் முடங்கிய பயணம் ரயில் பயணிக்கு ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு
கொச்சி, அக்.29- சென்னை- ஆலப்புழா ரயில் 13 மணி நேரம் தாமதமாக வந்ததால் பயணம் முடங்கிய ரயில் பயணிக்கு ரயில்வே ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க எர்ணாகுளம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. இதுகுறித்து போஷ் இந்தியா பிரைவேட் லிமிடெட் துணை மேலாளர் கார்த்திக் மோகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சென்னையில் நடந்த நிறுவன கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னை - ஆலப்புழா எக்ஸ்பிரஸில் பயணச்சீட்டு முன்பதிவு செய்தேன். ஆனால் எர்ணாகுளம் ரயில் நிலையத்தை அடைந்தபோது 13 மணி நேரம் தாமதமாக ரயில் இயங்கும் தகவல் கிடைத்தது. இதனால், நிறுவன கூட்டத்தில் தன்னால் பங்கேற்க முடியவில்லை. இந்த நிலையில்தான் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகியதாக அதில் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த ரயில்வே தரப்பு, பயணத்தின் நோக்கத்தை புகார்தாரர் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை, எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் போனது என்ற விசித்திரமான வாதத்தை முன்வைத்தது. அதை நிராகரித்த எர்ணாகுளம் நுகர்வோர் குறைதீர் ஆணையம், ரயில் பயணிக்கு தெற்கு ரயில்வே ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இந்த தொகையை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அதிகளவு பூச்சிக்கொல்லி மருந்து கலந்து காய்களை விற்ற வியாபாரிக்கு அபராதம்
திருநெல்வேலி,அக் 29- அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து காய்களை விற்பனை செய்த வியாபாரிக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தச்சநல்லுார் மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரநாராயணன் மாநகர பகுதியில் சீனி அவரைக்காயை உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பினார். இதில் அதிக அளவு பூச்சிகொல்லி மருந்து கலந்துள்ளது என்பது தெரிய வந்தது. தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர் சங்ரநாராயணன் ,நெல்லை ஜே.எம் 4 நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி விசாரித்து, அதிக அளவு பூச்சி கொல்லி மருந்து கலந்து சீனி அவரைக்காய் விற்பனை செய்ததற்காகவும், உரிமம் இல்லாமல் தொழில் நடத்தியதற்காகவும் வியாபாரி பாக்கியராஜ்க்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் ஒரு நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மைக்கேல் ஆஜரானார்.