districts

img

கொள்ளிடம் ரயில் நிலைய கழிப்பறை பயன்பாட்டுக்கு வருமா?

சீர்காழி, ஜன.11- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ரயில் நிலை யத்தில் பயணிகள் பயன்பாட்டுக்காக நெய்வேலி பழுப்பு  நிலக்கரி நிறுவனம் சார்பில் கழிவறை கட்டிடம் கட்டப் பட்டுள்ளது.  இந்த கழிவறை நவீன முறையில் கட்டப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகிறது. இதுவரை பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனால் இந்த  ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் மிகுந்த சிர மத்திற்கு உள்ளாகின்றனர்.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை மனு அனுப்பியும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. எனவே கொள்ளிடம் ரயில் நிலை யத்துக்கு வந்து செல்லும் பயணிகள் நலன் கருதி, பூட்டியே கிடக்கும் கழிப்பறையை ரயில்வே நிர்வாகம் உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.