திருவாரூர், மே 10 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வாரூர் மாவட்டம் குடவாசல் தெற்கு ஒன்றி யம் மற்றும் நகர கட்சி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் கார்டு வழங்கும் மே தின சிறப்பு பேரவை வெள்ளிக்கிழமை நடை பெற்றது. பேரவைக்கு குடவாசல் நகரச் செயலா ளர் டி.ஜி.சேகர், தெற்கு ஒன்றியச் செயலாளர் எம்.கோபிநாத் ஆகியோர் தலைமை வகித்த னர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வீரபாண்டியன், எம்.சேகர் ஆகியோர் உறுப்பினர்களுக்கு கார்டு வழங்கி உரை யாற்றினர். ஆர்.வி.லெனின் தலைமையில் 6 பேர் மற்றும் பா.பாஸ்கரன் தலைமையில் 5 பேர் என 11 பேர் கட்சியில் புதிதாக இணைந்த னர். அவர்களை வரவேற்று கதர் துண்டு அணிவிக்கப்பட்டது. நாகை நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த தோழர்களுக்கு நகரக் குழு சார்பாக புத்தகம் வழங்கி பாராட்டு தெரி விக்கப்பட்டது. கட்சி அலுவலகத்திற்கு நகர குழு உறுப்பினர் எம்.ராஜா 10 பிளாஸ்டிக் நாற்காலி வழங்கியதற்கு பாராட்டு தெரி விக்கப்பட்டது. வலங்கைமான் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள கட்சி உறுப்பினர்களுக்கு கட்சி கார்டு வழங் கும் மே தின சிறப்பு பேரவை ஆலங்குடி யில் நடைபெற்றது. கட்சியின் ஒன்றியச் செய லாளர் என்.ராதா தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி கட்சி உறுப்பினர்களுக்கு கார்டு வழங்கி சிறப்பு ரையாற்றினார். பேரவையில் புதிதாக 4 பேர் கட்சியில் இணைந்தனர். அவர்களை வரவேற்று கட்சியில் இணைத்துக் மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி, புதிய உறுப்பினர் களுக்கு கட்சி உறுப்பினர் படிவம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.