districts

img

நெசவாளர் நலச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்

கும்பகோணம்/அரியலூர், ஜன.3 - தமிழ்நாடு கைத்தறி சம்மேள னத்தின் (சிஐடியு) கோரிக்கைகளை வலியுறுத்தியும், கும்பகோணம் பேர றிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க  நிர்வாக சீர்கேடுகளை கலந்து, சங்க  அங்கத்தினர்களை பாதுகாக்க கோரி யும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட பட்டு மற்றும்  நூல் கைத்தறி நெசவுத் தொழிலா ளர் சங்கம் சார்பில்,  கும்பகோணம் பேரறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.ஆர். சந்தி ரன் தலைமை வகித்தார்.  சிஐடியு கைத்தறி சம்மேளன பொதுச் செயலாளர் என்.பி.நாகேந்தி ரன், ஏஐடியுசி தலைவர் மணி மூர்த்தி, மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே. சுப்பிரமணியன், தமிழ் மாநில காங்கி ரஸ் எல்.ஆர்.செல்வம், பி.நாராயண சாமி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கே.சந்துரு ஆகியோர் கோரிக் கையை விளக்கிப் பேசினர். மாவட் டப் பொருளாளர் எம்.பி.கிருஷ்ணன் நன்றி கூறினார்.  கும்பகோணம் பேரறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் 11 ரக ஒதுக்கீடு சட்டத்தை உறுதி யாக அமல்படுத்த வேண்டும். கைத்தறித் துறைகளுக்கு ஜிஎஸ்டி வரியை முழுவதும் ரத்து செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை இயற்கை சீற்ற நிவாரணம் ரூ.5000 வழங்க வேண்டும். போனஸ் சட்டம்  கொண்டு வர வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு பென்சன் தொகை யாக ரூ.5000 வழங்க வேண்டும்.

 வீட்டுமனையுடன் கூடிய வீடு கட்டும் திட்டங்களை கொண்டு வர  வேண்டும். 1985 ஆம் ஆண்டு தமிழக அரசால் சட்டமாக்கப்பட்ட நெசவா ளர் நலச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். கூட்டுறவு சங்க தேர்த லில் அனைத்து உறுப்பினர்களுக் கும் வாக்குரிமை வழங்கும் சட்டத்  திருத்தத்தை கொண்டு வர வேண்டும். பேரறிஞர் அண்ணா பட்டு  கூட்டுறவு சங்கத்தில் நெசவாளர் களுக்கு பாரபட்சமாக கூலி வழங்கு வதையும், பல்வேறு ஊழல்களை செய்து வரும் நிர்வாகத்தினரையும் கண்டிக்க வேண்டும். சங்க உறுப்பி னர்களுக்கு ஒரே மாதிரியாக கூலி வழங்க வேண்டும். கிளை விற்பனை நிலையத்தில் கவனம் செலுத்த வேண்டும். சங்க  அங்கத்தினர்களுக்கு ஒரே மாதிரி யான ஜரிகை வழங்க வேண்டும்.  சங்கத்திற்கு நிரந்தர பொறுப்பா ளரை பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அரியலூர் அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் காந்தி பூங்கா முன்பு  நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு, கைத்தறி நெசவு தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். என்.துரைராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி. துரைசாமி சிறப்புரையாற்றினார். சிஐ டியு கண்ணன், கோவிந்தராஜ், வாலி பர் சங்க நிர்வாகி ரவீந்திரன் ஆகி யோர் முன்னிலை வகித்து பேசினர்.  முன்னதாக மாதர் சங்க மாவட்டத் தலைவர் பத்மாவதி வரவேற்றார். தங்கராசு நன்றி கூறினார்.