பாபநாசம், மே 13 -
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் (பொ) மோகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், பாபநாசம் வட்டாரத்தில் தற்போது பருத்தி அதிகம் பயிரி டப்பட்டுள்ளது. தற்சமயம் நிலவி வரும் காற்றின் ஈரப்பதம் மற்றும் வெப்பத்தின் கார ணமாக பருத்தியில் பேக்டீரியல் இலைக் கருகல் நோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இதன் பாதிப்பால் விதையிலைகளில் நீர் ஊறிய சிறிய புள்ளிகள் ஒழுங்கற்றதாக காணப்பட்டு, இதன் பின்னர் இலை உதிர்ந்து விடும். இளஞ்செடிகளில் புதிதாகத் தோன்றும் இலைகளும் பாதிக்கப்பட்டு உதிர்ந்து விடும். இலையின் அடிப்புறத்தில் கருப்பு நிறப் புள்ளி கள் நரம்புகளால் கட்டுப்படுத்தப்பட்டு கோண வடிவத்தில் காணப்படும். நடு நரம்பு, கிளை நரம்புகளின் நுனியில் நீர் கசிவுத் தோன்றி, கருப்பு நிறமாக மாறும்.
இந்நோயானது பருத்தி காய்களையும் தாக்கும் தன்மை உடையது. தேவையற்ற களைச் செடிகளை வயலில் இருந்து அகற்ற வேண்டும். பேக்டீரியல் நோய்க்கான அறிகுறி தெரிந்தவுடன், பேக்டீரியல் கொல்லி மருந்தினை ஒரு ஹெக்டேருக்கு ஸ்டெரெப் டோமைசின் சல்பேட் 300 பிபிஎம் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2 கிலோ என்ற அளவில் தெளிக்க வேண்டும். மேலும் 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒருமுறை தெளிப்பதினால் இந்நோயை கட்டுப்படுத்தி மகசூல் இழப்பைத் தடுக்கலாம் என கூறப்பட் டுள்ளது.