districts

img

வீட்டுமனை பட்டா வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக,29 திருச்சி மாவட்டம் மருங் காபுரி வட்டத்தில் பல வரு டங்களாக  மக்கள் குடியி ருந்து வரும் வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். நீர் பிடிப்பு பகுதி களில் குடியிருக்கும் மக்க ளுக்கு மாற்று இடம் கொடுத்து பட்டா வழங்க வேண்டும்.அயன்பொரு வாய். கல்லுப்பட்டி, சொக் கம்பட்டி ஆகிய ஊர்களில் சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி செய்துதர வேண்டும். மருங்காபுரியில் இருந்து அடைக்கம்பட்டி வரையிலும், மட்டகுறிச்சி யிலிருந்து வளநாடு வரை உள்ள வனத்துறை க்கு சொந்தமான இடத்தில் சாலை அமைத்துதர வேண்டும். 30 வருடங்களாக பட்டா வழங்காமல் உள்ள தொகுப்பு வீடுகளுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். 26.7.2023 இல் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில் ஏற்றுக் கொண்ட படி கோரிக்கைக ளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மருங்காபுரி வட்ட குழு சார்பில் புதனன்று மருங்கா புரி வட்டாட்சியர் அலுவல கம் அருகில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.  போராட்டத்திற்குவட்ட செயலாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். போராட்டத்தை புறநகர் மாவட்ட செயலாளர் ஜெய சீலன் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு  உறுப்பினர் சிதம்பரம் பேசினார்.  போராட்டத்தில் வட்ட குழு உறுப்பினர்கள் கணேஷ், அண்ணாதுரை. நாகராசன், சின்னையா, பொன்னன், சசிகலா,  மாதர் சங்க வட்டசெயலாளர் கவிதா மற்றும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 200க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.  பின்னர் நடந்த பேச்சு வார்த்தையில் கோரிக்கை களை குறித்த காலத்தில் செய்து தருவதாக வட்டாட்சி யர் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் தற்கா லிகமாக கைவிடப்பட்டது.