வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் மூத்த வாக்காளர்களான கோபால் (89), விஜயம்மாள் (82) ஆகியோருக்கு நாகைமாலி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.