districts

img

வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

திருவாரூர், மார்ச் 30 - திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தேசிய வாக்காளர்கள் விழிப்புணர்வு கையெ ழுத்து இயக்கம் மன்னை ஜேசிஐ சார்பாக பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்னை ஜேசிஐ தலைவர் வினோத் தலைமை வகித்தார். மன்னார்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலு வலர் வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, வட்டாட்சியர் மகேஷ் ஆகியோர் தங்க ளின் கையெழுத்தை பதிவு செய்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். விழிப்புணர்வு பாடலுடன் கூடிய காணொலி காட்சி நிகழ்ச்சியும், தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப் பட்டது. மண்டல இயக்குநர் கோபிநாத், முன்னாள் மண்டலத் தலைவர் கோவிந்த ராஜன் மற்றும் தலைவர்கள் கையெழுத் திட்டு விழிப்புணர்வு இயக்கத்தில் பங்கேற்ற னர். மன்னை ஜேசிஐ செயலாளர் கருணா கரன் நன்றி கூறினார்.