districts

img

திருச்சி முக்கிய செய்திகள்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய புதிய ஆணையராக   வெங்கடேசன் பொறுப்பேற்றார்

தமிழக அரசு குறித்து அவதூறு:  இந்து அமைப்பு நிர்வாகி கைது

தஞ்சாவூர், ஜூலை 4 -  தமிழக அரசு குறித்து அவதூறு பரப்பும் விதமாக பேசிய தகவல் சமூக வலைதளங்களில் பரவியது தொடர்பாக தஞ்சாவூரில் இந்து அமைப்பு நிர்வாகியைக் காவல் துறை யினர் கைது செய்தனர்.

கோவாவில் ஜனஜக்ருதி சமிதி அமைப்பின் சார்பில் அகில பாரதிய இந்து தேசிய மாநாடு ஜூன் 29 ஆம் தேதி நடைபெற்றது. இதில், தஞ்சாவூர் கீழவாசல் ரெட்டை வார்க்காரத் தெருவைச் சேர்ந்தவரும், இந்து எழுச்சிப் பேரவை நிறுவனத் தலைவருமான பழ. சந்தோஷ்குமார் (29) பங்கேற்றார். 

அப்போது அவர் பேசுகையில், கடந்த 5 ஆண்டுக ளில் இந்து விரோத தமிழ்நாடு அரசு 200 இந்து கோயில் களை இடித்துள்ளது எனக் கூறினாராம். இவருடைய இந்தப் பேச்சு பேஸ்புக், எக்ஸ் வலைதளங்களில் பரவிவருகிறது.

இந்நிலையில், தமிழக அரசு குறித்து அவதூறு பரப்பும் விதமாக சந்தோஷ்குமார் பேசியதாக தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் மோத்திரப்ப சாவடியைச் சேர்ந்த திமுக உறுப்பினர் டி. லெனின் (45) புகார் அளித்தார். இதன் பேரில் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.

தஞ்சாவூர் குப்பைக் கிடங்கில்  மீண்டும் தீ விபத்து

தஞ்சாவூர், ஜூலை 4 -  தஞ்சாவூர் மாநகராட்சிக் குப்பைக் கிடங்கில் ஒரே வாரத்தில் மீண்டும் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பரவும் புகையால் சுற்றியுள்ள பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகினர். தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகேயுள்ள ஜெபமாலை புரத்தில் உள்ள இந்தக் குப்பைக் கிடங்கில், மாநகரில் 51 வார்டுகளிலும் நாள்தோறும் சேகரிக்கப்படும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்பட்டு வரு கின்றன.

இந்நிலையில், இக்கிடங்கில் ஜூன் 27 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சுற்றியுள்ள பகுதிகளுக்கு புகை பரவியதால், அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். நெருப்பு அணைக் கப்பட்ட நிலையில், மீண்டும் புதன்கிழமை முற்பகல் தீ பற்றி எரிந்தது. தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள்,  மாநகராட்சி நிர்வாகத்திலிருந்து 3 தண்ணீர் லாரிகளில் பணி யாளர்கள் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட னர். ஆனால், அப்பகுதியிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் புகை பரவியதால், நடந்து சென்றவர்களும், வாகன ஓட்டு நர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். மேலும், அப்பகுதிகளில் வசிப்பவர்கள் மூச்சுவிட முடியாமல் திணறினர். மாநகராட்சி பணியாளர்களும், தீயணைப்பு வீரர்களும் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் பெரியகோயிலில்  பக்தரிடம் ரூ.15 ஆயிரம் திருட்டு

தஞ்சாவூர், ஜூலை 4 -  தஞ்சாவூர் பெரியகோயிலில் புதன்கிழமை பக்தரிடம் ரூ.15 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிச் சென்ற  நபரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்தவர் லட்சுமண குமார். தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சுற்றுலாவாக தமிழகத்துக்கு வந்துள்ளார்.

இவர், தஞ்சா வூர் பெரியகோயிலுக்கு புதன்கிழமை மாலை சென்றார். அப்போது, பிரதோஷ வழிபாடு நடைபெற்றதால் கூட்டம் அதிகமாக இருந்தது. சன்னதிகளில் வழிபட்ட இவர் கேர ளாந்தகன் கோபுரம் அருகே வந்தபோது, தனது கால் சட்டைப் பையைத் தடவி பார்த்தபோது பிளேடால் கிழிக்கப் பட்டிருப்பதும், ரூ.15 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இது குறித்து மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மன்னார்குடி தலைமை மருத்துவமனையில்  ஓய்வூதியருக்கான  பிரிவு  துவக்கிடுக  ஓய்வூதியர்கள் கோரிக்கை

மன்னார்குடி,  ஜூலை 4- மன்னார்குடி அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் எட்டாவது வட்டப் பேரவை கா அம்பிகாபதி தலைமையில் நடைபெற்றது.  இணை செயலாளர் புலவர் கா முருகை யன் வரவேற்றார் .மாவட்ட துணைத் தலைவர் பி புவ னேஸ்வரி துவக்க உரையாற்றினார் செயலாளர் துரை கணேசன் வேலை அறிக்கையும்  பொருளாளர் ஆ காளி முத்து வரவு-செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். தோழமை தொழிற்சங்க தலைவர்கள் வாழ்த்திப்பேசினர். மாநில செயலாளர் குரு சந்திரசேகரன் நிறைவுரையாற்றினார்.

ஒன்றிய- மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி  ஓய்வு பெற்ற  ஓய்வூதியர்களுக்கான  புற நோயாளிகள்  தனிப்பிரிவு மன்னார்குடி மாவட்ட தலைமை  மருத்துவமனையில்  அமைக்கப்பட  வேண்டும். மூத்த குடி மக்களுக்கு ரயில் கட்டணங்களில் சலுகை முறை மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் . ஏலம் போடுவது போல் ரயில் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் சூப்பர் பிரிமி யம்  தட்கல்  முறையை ரத்து செய்திட வேண்டும்  மன்னார்குடி மூன்றாம் தெரு சாலை சந்திப்பில்  கூடுதலாக வேகத் தடை ஏற்படுத்த வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிறிய ஜவுளிப்பூங்கா அமைக்க தொழில் முனைவோருக்கு அழைப்பு

புதுக்கோட்டை, ஜூலை 4:-  சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க முன்வரவேண்டுமென தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளதாவது:

ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்த பட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப் பட வேண்டும். தகுதிவாய்ந்த திட்ட மதிப்பீட்டில் (பொது உள்கட்ட மைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டி டங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானிய மாக வழங்கப்படுகிறது.

எனவே, சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை அனைத்து மாவட்டங்களிலும் பயன் படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளைப் பெருக்கவும், அனைத்து தொழில் முனைவோர்களும் முன்வரவேண்டும்.  இது தொடர்பாக ஆலோசிக்கும் பொருட்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்  எதிர்வரும் 18.07.2024 அன்று முற்பகல் 11.30 மணியளவில் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத் தில், புதுக்கோட்டை  மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள் தவறாது கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.   இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மண்டல துணை இயக்குநர், துணிநூல்துறை, மண்டல துணை இயக்குநர் அலுவலகம், எண்: 30ஃ3 நவல டியான் வளாகம், முதல் தளம், தாந்தோணிமலை, கரூர் -639005 என்ற முகவரியிலோ அல்லது 04324-299544, 7397556156 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

புதுக்கோட்டையில் 12 பள்ளிகளை  பசுமைப் பள்ளிகளாக தேர்வு

புதுக்கோட்டை, ஜூலை 4:- காலநிலை மாற்ற இயக்கக் குழுக் கூட்டம் புதுக் கோட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அறிமுகப் படுத்தியுள்ள பசுமைப் பள்ளித் திட்டம் குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 பசுமைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

 ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சூரிய சக்தியை பயன்படுத்துதல், மழை நீர் சேகரிப்பை அமைத்தல், காய்கறித் தோட்டங்கள், மூலிகை தோட்டங்கள், உரம் தயாரிக்கும் கூடங்கள் மற்றும் பிளாஸ்டிக் இல்லாத சூழலை உருவாக்குதல் போன்ற பல்வேறு பசுமை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இது தவிர, பல்வேறு துறைகளால் மேற்கொள்ளக்கூடிய பல்வேறு காலநிலை தணிப்பு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சி கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்றார்.