திருவாரூர், பிப்.15- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவற்றின் மாவட்ட அமைப்புகள் சார்பாக பிப்ரவரி 14 அன்று காதலர் தின சிறப்பு கருத்தரங்கம் திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மு. செளந்தரராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முனைவர் ஜீ. வெங்கடேசன் நோக்கவுரை ஆற்றினார். கவிஞர்கள் வரத. வசந்தராஜன், வி. ராகப்பிரியா ஆகியோர் கவிதை வாசித்தனர். பாடகர் ஆரூர் பக்கிரி தாஸ் பாடல் பாடினார். சாதி, மத மறுப்பு திருமணம் செய்த தம்பதிகள் மேரி -சுரேஷ், மாலதி- ராஜேந்திரன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது, நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மாதவராஜ் எழுதிய ஆதலினால் காதல் செய்வீர் என்ற புதினத்தை வழங்கிய தமுஎகச மாநில துணை பொதுச்செயலாளர், கவிஞர் களப்பிரன் அன்பும்-அறனும் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார், நிகழ்வில் மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பா.ஆனந்த், வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேல வன் மற்றும் பலர் உரையாற்றினர். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பா.லெ. சுகதேவ் நன்றி கூறினார்.