கரூர், மார்ச் 18 - தோகைமலை அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டுமென வாலிபர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கரூர் மாவட்ட பேரவை கூட்டம் சங்க அலு வலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சதீஸ் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் சிறப்புரையாற்றினார். ஒன்றிய, மாநில அரசுகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கரூர் மாவட்ட கிராமப் புற இளை ஞர்களுக்கு தேவையான விளையாட்டு மை தானம், உடற்பயிற்சி கூடங்கள் அமைத்து கொடுக்க வேண்டும். கரூர் நகரத்தில் முக்கிய வழித்தடங் களில் மகளிர் பேருந்துகள் இயக்க வேண்டும். கரூரில் இருந்து பகல் நேரத்தில் சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும். கரூரில் புதிய பேருந்து நிலை யம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தோகைமலையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவ மனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். கரூரில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணிநேரமும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவையில், மாவட்டத்தின் புதிய தலை வராக பி.சதீஸ், செயலாளராக சிவா, பொரு ளாளராக பிரகாஷ், மாவட்ட துணைச் செய லாளராக ராஜிவ்காந்தி, துணைத் தலைவ ராக தினேஷ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.