districts

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெறலாம்

திருச்சிராப்பள்ளி, ஆக.8-

     வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக் கான உதவித்தொகை பெற விண்ணப் பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.6.2023 அன்றைய தேதியில் ஐந்து வரு டம் முடிவடைந்திருக்க வேண்டும். முறை யாக பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும்  தேர்ச்சி பெற்ற, மேல்நிலை வகுப்பு, பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனை வரும் தகுதி உடையவர் ஆவர்.

    மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்த வரை, எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் பத்தாம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு மற்றும்  பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 30.6.2023 அன்றைய தேதியில் ஓராண்டு  முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடை யவர் ஆவர்.  

    ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரி வினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்  டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு மற்றும் வயது வரம்பு ஏதுமில்லை. அரசின் முதியோர் உதவித்தொகை பெறு பவர்களாயின், அவர்களுக்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியில்லை. பயன்தாரர் எந்த ஒரு கல்வி  நிறுவனத்திலும் பயில்பவராக இருக்கக் கூடாது.  

    மேற்குறிப்பிட்ட தகுதியுடையோர், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழ் மற்றும் அசல் குடும்ப அட்டை  ஆகியவற்றுடன் நேரில் வந்து, விண்ணப்பப் படிவத்தை திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்  நெறி வழிகாட்டுதல் மையத்தில் இலவச மாக பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற ஆதார் அட்டை விவரங்கள் சமர்ப்பிப்பது அவசியமாகும்.  

    ஏற்கனவே மூன்றாண்டுகள் உத வித்தொகை பெற்றவர் மற்றும் பொறி யியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற்கல்வி, பட்டப் படிப்புகள் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை பெற தகுதியில்லை என  திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிர தீப்குமார் தெரிவித்துள்ளார்.