districts

img

பெட்ரோல் - டீசல் விலையை 10 ஆண்டில் 108 முறை உயர்த்தியது மோடி ஆட்சி!

போடி/விருதுநகர், ஏப்.11- தேனி தொகுதி திமுக வேட்பா ளர் தங்க.தமிழ்ச்செல்வன், விருது நகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்  ப.மாணிக்கம் தாகூர் ஆகியோ ருக்கு வாக்கு சேகரித்து, திமுக மாநி லங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பிரச்சாரம் செய்தார். போடி நாயக்கனூர், விருதுநகர்  பிரச்சாரங்களில் அவர் பேசியதாவது: “மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் 108 முறை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை  உயர்த்தியுள்ளனர்.

மன்மோகன் சிங், ஆட்சியில் கச்சா எண்ணெய்  விலை அதிகம். ஆனால், பெட்  ரோல் ரூ.60-க்கும் கேஸ் ரூ. 450-க்கும்  கிடைத்தது. தற்போது கச்சா எண் ணெய் விலை குறைந்திருக்கிறது. ஆனால், பெட்ரோல் விலை அதி கரித்திருக்கிறது. கேஸ் விலை ரூ. 1,000-த்தை தாண்டி விட்டது.

பெட்ரோல், டீசல் மூலமாக மட்டும் பாஜக அரசு, ரூ.7.75 லட்சம்  கோடியை வசூலித்துள்ளது. பொதுத்  துறை நிறுவனங்களைத் தனியா ருக்கு விற்றதில் ரூ. 4.50 லட்சம் கோடி  திரட்டியுள்ளது. இதையெல்லாம் என்ன செய்தார்கள் என்பதுதான் மிக முக்கியம். ஒரு பெட்டி கடைக்காரர் ரூ. 2 லட்சம் வங்கியில் கடன் கேட்டால், பல்வேறு விதிமுறைகளை கூறி பணத்தை திரும்ப கொடுப்பாரா? கொடுக்க மாட்டாரா என்று பல  கேள்விகள் கேட்பார்கள்.

ஆனால்,  ரூ.10ஆயிரம் கோடி கடனை பெரிய  தொழில் அதிபர்களுக்கு கேட்கா மலே கொடுத்தார் மோடி. ஒரே நப ருக்கு ரூ. 12 ஆயிரம் கோடியை கொடுத்தார். இவர்கள் யாரும் திருப்பி தரவில்லை. இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டனர். அங்கு சென்றதும் தலைமறை வாக கூட இல்லை. லண்டனில் கடற் கரையில் தலையில் தொப்பியை வைத்துக் கொண்டு ஜாலியாக உள்ளனர். இப்படிப்பட்டவர்களை பிடிக்கவில்லை. மாறாக ரூ.10 ஆயி ரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது இந்த மோடி அரசு.  ரயில்வேயில் 16 லட்சம் தொழி லாளர்கள் வேலை பார்த்தனர். தற்போது 12 லட்சம் பேர் தான் உள்ள னர். விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர், வியாபாரிகள் ஜிஎஸ்டி வரியினால் பாதிக்கப்படு கின்றனர்.

இது குறித்ததெல்லாம் மோடி கவலைப்படுவதில்லை. தமிழ்  நாட்டில் புயல், வெள்ளம் வந்தபோது  வராத மோடி இன்று உங்கள் வாக்  குக்காக 10 முறை தமிழகம் வருகி றார். பாஜக இயற்றிய பாதகமான சட்டங்களுக்கு எல்லாம் ஆதரவு தெரிவித்த கட்சி அதிமுக.  இந்த இரண்டு கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும். இந்தியா கூட்டணியை ஆட்சியில் அமர்த்த  வேண்டும். அதற்காக மக்கள் அனை வரும் ஏப்ரல் 19 அன்று தங்களின் வாக்குகள் மூலம் அமைதிப் புரட்சி  செய்ய வேண்டும்.

இவ்வாறு திருச்சி சிவா பேசியுள்ளார்.