திருச்சிராப்பள்ளி, செப்.1- திருச்சி மாநகராட்சி ஓயாமாரி மின் மயானத்தை தனியார்மயமாக்கும் முயற்சி யை தடுத்து நிறுத்திட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட ஆட்சியர் சிவ ராசிடம் மனு அளித்துள்ளார். இதுதொடர்பாக ஆட்சியருக்கு அவர் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி ஓயாமாரி சுடுகாடு நூற்றாண்டு களை கடந்த திருச்சி நகர ஈமகிரியை செய்து வருகிற இடமாகும். மங்கம்மாள் ஆட்சி காலத்தில் காவிரியாற்றில் சுடுகாட்டிற்கு எதிரில் ஈமகிரியை மண்டபத்தை உரு வாக்கியுள்ளார். அவ்வாறான இந்த சுடு காட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின் மயானம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில். திருச்சி மாநகராட்சி ஓயா மாரி மின் மயானத்தை தனியாருக்கு ஒப்ப டைத்திருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்த மயானத்தில் பிணங்களை எரியூட்ட ரூ.1500 பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது தனியார்வசமானால் கடும் கட்டண உயர்வு ஏற்படும் ஆபத்து உள்ளது. மேலும் கடந்த காலங்களில் ரூ.41 லட்சம் வருமானமும் ஈட்டியுள்ளது. எனவே இதில் தாங்கள் தலையிட்டு தனியார்மய முயற்சி யை தடுத்து நிறுத்திடவும், சுடுகாட்டு பரா மரிப்பை தொடர்ந்து மாநகராட்சியே நிர்வ கிக்க உத்தரவிட வேண்டுகிறேன். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.