districts

img

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ சிபிஎம் தலைவர்களுக்கு நன்றி

திருச்சிராப்பள்ளி, ஆக.17 - இந்தியா கூட்டணி சார்பில் திருச்சி நாடாளு மன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  மதிமுக வேட்பாளர் துரை. வைகோ திருச்சி வெண்மணி  இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வா கிகளை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசு கையில், “பொதுவுடமை இயக்கங்களைப் பொருத்த வரை எங்களோடு ஒத்த  கருத்து உடையவர்கள் தான். என்னை வெற்றிபெறச் செய்ததில் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களின் உழைப் பும், பங்கும் மிகப் பெரியது. இனி வரும் காலங்களில் மறுமலர்ச்சி திமுகவும், பொதுவுடமை இயக்கமும் இரட்டைக் குழல் துப்பாக்கி யாக இணைந்து செயல் படுவோம்“ என்றார். இந்நிகழ்வில், மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலா ளர் ராஜா, புறநகர் மாவட்டச்  செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் பேசினர்.  இதில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பி னர்கள், பகுதி செயலாளர் கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் மறுமலர்ச்சி திமுக  துணைப் பொதுச் செயலா ளர் மருத்துவர் ரொஹையா, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் டி.டி.சி.சேரன், புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண் டனர்.