districts

திருச்சி விரைவு செய்திகள்

விஷவாயு தாக்கி 4 பேர் பலி: அரசு நிவாரணம் வழங்கல்

கரூர், நவ.19 - கரூர் மாவட்டம் சுக்காலியூர் காந்திநகர் பகுதியில் தனி நபர் வீடு கட்டுமானப் பணியின்போது கீழ்நிலை தொட்டி யில், கான்கீரிட் பலகைகள் மற்றும் சவுக்கு கட்டைகளை  அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூச்சுச் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த நான்கு  பேரின் குடும்பங்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி நிவாரண நிதி, வேலைவாய்ப்பு, கல்வி  உதவித்தொகை, வீடு மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசு நிவாரண உதவிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் வெள்ளிக்கிழமை நேரில் சென்று,  அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல்கூறி வழங்கி னார்.


விழிப்புணர்வு பேரணி  

தஞ்சாவூர், நவ.19 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் குருவிக்கரம்பை ஊராட்சியில் உலக கழிப்பறை நாள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  குருவிக்கரம்பை ஊராட்சி மன்றத் தலைவர் வைர வன் தலைமை வகித்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியில் ஊராட்சி செய லாளர் கிருஷ்ணப்பிரியா, ஊராட்சி சுய உதவிக் குழு ஒருங்கிணைப்பாளர் அம்மாக்கண்ணு, பணித்தளப் பொறுப்பாளர்கள் பழனியம்மாள், முருகானந்தம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாலமுருகன், செல்வி செல்வம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பேரணி ஊராட்சியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது.  முன்னதாக பொது சுகாதாரம் தொடர்பான விழிப்பு ணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அப்போது, “திறந்த வெளியில் மலம், ஜலம் கழிக்க மாட்டோம். வீட்டுக்கு வீடு  கழிப்பறை அமைப்போம். கழிப்பறையை மட்டுமே பயன் படுத்துவோம். மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து ஊராட்சி பணியாளர்களிடம் வழங்கு வோம்” என உறுதிமொழி ஏற்கப்பட்டது.


விளையாட்டு போட்டிகள்

மயிலாடுதுறை, நவ.19 - மயிலாடுதுறை மாவட்டம் திருவிளையாட்டம் சௌரி ராசன் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி மாவட்ட சைல்டு லைன் சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு பள்ளியின் உதவி தலைமையாசிரியர் சிவநே சன் தலைமை வகித்தார். சினேகா தொண்டு நிறுவனத் தின் குழந்தைகள் உரிமை பிரிவு தலைவர் என்.தன லெட்சுமி, ஒருங்கிணைப்பாளர் பி.விமலா ஜாஸ்மின் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு கபடி, கோ  கோ, பலூன் உடைத்தல், எண் விளையாட்டு உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.


விளையாட்டு விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, நவ.19 - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் தின் மூலம் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்ப தற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான  உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளை யாட்டுப் பள்ளிகள், மாணவர்களுக்கான விளையாட்டு  விடுதி, அரியலூர், சென்னை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி,  மதுரை, நீலகிரி, இராமநாதபுரம், தஞ்சாவூர், தூத்துக்குடி,  திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய இடங்களி லும் மற்றும் மாணவிகளுக்கான விளையாட்டு விடுதி சென்னை, திண்டுக்கல், தருமபுரி, ஈரோடு, பெரம்பலூர்,  புதுக்கோட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்க ளிலும் செயல்பட்டு வருகின்றன. இவ்விடுதிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள், அரசு அங்கீ கரிக்கப்பட்ட விளையாட்டு அமைப்புகள் நடத்திய போட்டி களில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் பதக்கம் வென்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 9 ஆம்  வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவிய ருக்கான 2020 - 2021 மற்றும் 2021 - 2022 மற்றும் 2022 - 2023  (தேர்வு நாள் வரை) ஆகிய கல்வியாண்டுகளில் அரசு  அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு அமைப்புகள் நடத்திய  போட்டிகளில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில்  பதக்கம் வென்ற மாணவ, மாணவியருக்கு நேரடி சேர்க்கை மேற்கொள்ளப்படும். 2022 - 2023 ஆம் ஆண்டிற்கு விளையாட்டு விடுதியில்  இரண்டாம் கட்ட சேர்க்கைக்கு - மாணவர்கள் கைப்பந்து,  வளைகோல்பந்து, கிரிக்கெட், வாள்சண்டை, தடகளம், கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக், கையுந்துபந்து, கால்பந்து, ஸ்குவாஷ் மற்றும் கபாடி உள்ளிட்ட பிரிவுகளிலும், மாணவிகள் - குத்துச்சண்டை, வாள்சண்டை, கூடைப்பந்து,  கையுந்துபந்து, கபாடி, தடகளம், கால்பந்து, கைப்பந்து,  வளைகோல்பந்து மற்றும் டென்னிஸ் உள்ளிட்ட பிரிவு களிலும் www.sdat.tn.gov.in என்ற இணையதள முக வரியில் 25.11.2022 -க்குள் விண்ணப்பிக்கலாம்.      படிவத்தினை பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள்  25.11.2022. தேவைப்படும் நேர்வுகளில் மட்டும் தேர்வுகள்  26.11.2022 அன்று தொடங்கி 29.11.2022 வரை நடைபெற  உள்ளது.


பேருந்து நிலையத்தில்  வாடகை செலுத்தாத  15 கடைகளுக்கு பூட்டு

தஞ்சாவூர், நவ.19 -  தஞ்சாவூர் அய்யாசாமி வாண்டையார் நினைவு (பழைய) பேருந்து நிலையத்தில் பொலிவுறு நகரத் திட்டத்தின்  கீழ் ரூ.15.49 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டு, 49 கடைகள்  கட்டப்பட்டன. கடந்த 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொது  ஏலத்தில் ரூ.60,000 முதல் ரூ.82,000 வரை வாடகை செலுத்து வதாக கூறி வியாபாரிகள் கடைகளை எடுத்தனர். ஆனால் அந்த அளவுக்கு வியாபாரம் நடைபெறாததால், பல வியாபாரிகளால் வாடகை செலுத்த முடியவில்லை. இத னால், 3, 4 மாதங்களாக வியாபாரிகள் வாடகை நிலுவை  வைத்துள்ளனர். இதன் காரணமாக, வாடகை நிலுவை வைக்கப்பட்டுள்ள 15 கடைகளுக்கு மாநகராட்சி அலுவ லர்கள் வெள்ளிக்கிழமை பூட்டுப் போட்டு பூட்டினர். இதனால் அதிருப்தியடைந்த மற்ற வியாபாரிகள் வியா பாரத்தை புறக்கணித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த காவல்துறையினர் நிகழ்வி டத்துக்குச் சென்று, வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது வியாபாரிகள், கடைகளின் வாடகை அதிக மாக இருப்பதால், தங்களால் செலுத்த முடியவில்லை என்றும், வாடகையைக் குறைக்காவிட்டால், கடைகளைத் திரும்ப ஒப்படைக்கிறோம் எனவும், எங்களது பணத்தைத் திரும்பத் தருமாறும் கூறினர்.   இதுதொடர்பாக, மாநகராட்சி அலுவலர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என காவல் துறையி னர் கூறினர். அதற்கு, கடைகளைத் திறந்தால்தான் பேச்சுவார்த் தைக்கு வருவோம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.  இதைத்தொடர்ந்து, மாநகராட்சி அலுவலர்களிடம் காவல் துறையினர் கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய தையடுத்து, கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.


காப்பீட்டு நிறுவனங்கள் பாதுகாப்பு சிறப்பு கூட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ.19 - மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் சார்பில் பொதுத்துறை, பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் பாதுகாப்பு சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை திருச்சியில் நடந்தது. மதுரை மண்டல தலைவர் பிரபு தலைமை வகித்தார். தென் மண்டல இன்சூரன்ஸ் சங்க துணை தலைவர் புஷ்பராஜன் சிறப்புரையாற்றினார். மண்டலக் குழு உறுப்பி னர்கள் ராஜமகேந்திரன், சத்தியநாதன், தென் மண்டல  ஊழியர் சங்க இணை  செயலாளர் பாலசுப்ரமணி யன் மற்றும் அகில இந்திய பென்சனர் சங்க தலைவர் மணிவேல் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர். முன்னதாக முத்துகும ரன் வரவேற்றார். மண்டல  செயலாளர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.