திருச்சிராப்பள்ளி, ஜூலை 28- அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தை உடனே இறு திப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு தமிழ் நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார் பில் வியாழனன்று டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து பணிமனை முன்பு வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட் டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலை வர் சரவணன் தலைமை தாங்கினார். உதவி செய லாளர்கள் ராமைய்யா, ஜோசப், பொருளாளர் மகேந் திரன், மாவட்ட உதவி தலை வர் ஜெயராமன் ஆகியோர் பேசினர். மாநில உதவி தலைவர் முத்துவேல், மாநில தலை வர் அருள்தாஸ், மாநில துணைத்தலைவர் ரெங்க ராஜன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இதில் ஏராளமா னோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அரசு போக்குவரத்து கழக வழித் தடங்களில் தனியார் பேருந்து களை இயக்க மேற்கொள் ளும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். ஓட்டுநர், நடத்துநர்களை காண்ட் ராக்ட் அடிப்படையில் நிய மிக்க டெண்டர் கோரப்பட் டுள்ளதை திரும்பப் பெற வேண்டும். போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க வேண்டும். பொது போக்கு வரத்தை பலப்படுத்த வேண் டும். தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். ஊதிய ஒப்பந் தத்தை உடனே இறுதிப் படுத்த வேண்டும். பேட்டா, இன்சென்டிவ் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய் வுக்கால பலன், அகவிலைப் படி உயர்வு, மருத்துவ காப் பீடு ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும் என வலி யுறுத்தப்பட்டன.