திருச்சிராப்பள்ளி, ஜன.31 - போக்குவரத்து கழகங்களுக்கு வரவுக் கும் செலவுக்குமான வித்தியாச தொகையை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலா ளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். 1.4.2003-க்கு பின் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியின்போது இறந்த தொழிலா ளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நலச்சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஒருங்கி ணைப்பாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஆர்டிடி மேலாண் இயக்குநர் வரதராஜன் துவக்க உரையாற்றினார். போராட்டத்தை விளக்கி ஓய்வு பெற் றோர் நல அமைப்பு கோவை தியாகராஜன், டிஎன்எஸ்டிசி (சிஐடியு) திருச்சி மண்டல தலைவர் கருணாநிதி, திருச்சி பொதுச் செயலாளர் மாணிக்கம் உள்ளிட்டோர் பேசினர். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன் நிறைவுரையாற்றினார். புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துத் தொழிலா ளர்களின் வேலை நிறுத்தத்தை விளக்கி புதுக்கோட்டை போக்குவரத்துப் பணி மனை முன்பு சிஐடியு சார்பில் செவ்வா யன்று வாயிற்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரசுப் போக்குவரத்து ஊழி யர் சங்கத்தின் புதுக்கோட்டை மண்டலப் பொதுச் செயலாளர் ஆர்.மணிமாறன் தலைமை வகித்தார். சிஐடியு சம்மேளன துணை பொதுச் செயலாளர் ஏ.கனக சுந்தர் விளக்கவுரையாற்றினார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா உள்ளிட்டோர் பேசினர். கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமைய கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, அரசு போக்குவரத்து (சிஐடியு) தொழி லாளர் சங்க பொதுச் செயலாளர் மணி மாறன் தலைமை வகித்தார்.