districts

img

ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் தெருமுனை பிரச்சாரம்

அறந்தாங்கி, ஆக.14 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி யில் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேச விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து  கட்டுமாவடி முக்கம் சாலை, பேருந்து நிலையம் அருகே தொழிலாளர் முன்னேற்ற  சங்கம், சிஐடியு, ஏஐடியுசி, ஏஐசிசிடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தெருமுனைப் பிரச்சாரம் செய்தன.  பிரச்சாரத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற  சங்க மாவட்டத் தலைவர் ரெத்தினம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செய லாளர் ஏ.ஸ்ரீதர், ஏஐடியுசி மாவட்டச் செய லாளர் ப.ஜீவானந்தம், ஏஐசிசிடியு மாவட்டத்  தலைவர் எஸ்.சிவராஜ் ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.  தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை  செயற்குழு எம்.வேலுச்சாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் முகமது அலி ஜின்னா,  ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் எஸ்.சிவராஜ்,  ஏஐடியுசி மாவட்ட துணை தலைவர் தர்மராஜன், சிஐடியு மாவட்ட துணை செய லாளர் மாரிக்கண்ணு, ஏஐசிசிடியு மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள்தாஸ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி  பேசினர்.