அருமனை, அக்.5- கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகமானதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போ துமலையோர கிராமங்களில் மழை குறைந்துள்ளது. இதனால் ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. அதையொட்டி திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கான தடை நீக்கப்பட்டு குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாமாக குளித்து மகிழ்ந்தார்கள்.