districts

img

தோழர் சுரேஷ்குமார் நினைவாக அருமனையிலிருந்து ஜோதி பயணம்

அருமனை, ஆக.2 -

      தமிழக அரசு போக்குவரத்து தொழிலா ளர் சங்கம் (சிஐடியு) நாகர்கோவில் மண்டல 24 ஆவது பேரவை வியாழனன்று மார்த்தாண் டத்தில் நடைபெறுகிறது.

     இந்த பேரவை யில் ஏற்ற வேண்டிய ஜோதியை அருமனை தோழர் சுரேஷ்குமாரின் நினைவிடத்திலிருந்து சுரேஷ்குமார் தந்தை விஸ்வலிங்கம் எடுத்து கொடுக்க சங்க துணைத் தலைவர் எட்வின்மனோகர் பெற்றுக் கொண்டார். பின்னர் நெடிய சாலை பகுதியில் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச்செய லாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஸ்டீபன் ஜெயக்குமார் துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் பி.சிங்காரன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர். செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அண்ணாதுரை,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  ஆர். லீமாறோஸ், அருமனை வட்டாரச் செயலாளர் சி. சசிகுமார் மற்றும் ஏராளமா னோர் உரையாற்றினர்.