districts

img

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க கோரி வாகன விழிப்புணர்வு பரப்புரை

பேராவூரணி, ஏப்.28-

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள நாட்டாணிக்கோட்டை வடக்கு, பேராவூரணி கிழக்கு, பொன்னாங் கண்ணிக்காடு, கொன்றைக்காடு, வலசக் காடு, ஈச்சன்விடுதி, இடையாத்தி கிழக்கு மற்றும் பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில், ‘‘குழந்தைகளை சேர்ப்போம் எதிர்காலத்தை வளமாக்கு வோம்’’ என்ற விளம்பர வாசகத்துடன் தமிழ் நாடு அரசின் மாணவர் சேர்க்கை குறித்த விழிப் புணர்வு வாகனம் அனைத்து பள்ளி களுக்கும் வந்தது.  

   தொடக்க கல்வி மாணவர்களுக்கு அரசு  செயல்படுத்தி வரும் எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங் கள் மற்றும் மாணவர் சேர்க்கை குறித்த பரப்புரை நடைபெற்றது. பின்னர் மாண வர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க கோரி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.  

   பரப்புரை வாகனத்தை வட்டாரக் கல்வி அலுவலர்கள் அங்கையற் கண்ணி, கலாராணி, வட்டார வள மேற்பார் வையாளர் முருகேசன் ஆகியோர் தொடங்கி  வைத்தனர்.  

   ஆசிரிய பயிற்றுநர்கள் முனிராஜ், சிவ முருகன், சரவணன், வேம்பையன், இல்லம்  தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண், வட்டார ஒருங்கிணைப்பாளர் இராம நாதன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.