திருவாரூர், ஜூன் 1-
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஐம்பெரும் விழா கடந்த மே 29 அன்று சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு அமைச்சர் கள் பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோரின் பங்கேற்புடன் நடை பெற்றது.
விழாவில் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டமைக்காக, நன்னிலம் வட்டம், பூந்தோட்டம் அரசு பள்ளி ஆசிரியர் கோ.ஹேம லதாவுக்கு, சிறந்த ஆசிரியருக்கான ‘கலைஞர் விருது’ மற்றும் பாராட்டுச் சான்றிதழை தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். நிகழ்ச்சியில் சூர்யா பப்ளிகேஷன்ஸ் நிறு வனர் இ.பாலசுப்ரமணியம், ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விருது பெற்ற ஆசிரியர் கோ.ஹேமலதாவை, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.