districts

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் விஏஓ மனைவியின் வேலையை பார்க்கும் கணவர்

திருத்துறைப்பூண்டி, மே 20-  

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே திருக்களர் கிராம நிர்வாக அலுவலராக முகில்  என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது கண வர் ஏகாம்பரம். இந்நிலையில், முகிலின் கிராம நிர்வாக  அலுவலர் பணிகளை ஏகாம்பரமே செய்து  வருவதாக தெரிகிறது.

    மேலும் பொது மக்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கையெழுத்து பெறச் சென்றால், மனைவி யின் கையெழுத்தை இவரே போடுகிறார்.  மேலும் சொந்த ஊரிலேயே மனைவி  வேலை செய்து வருவதால், பொதுமக்களி டம் லஞ்சம் கேட்டு மிரட்டுவது, ஒருமையில் பேசுவது, சாதியைச் சொல்லி திட்டுவது என கிராம நிர்வாக அலுவலரின் கணவர் ஏகாம்பரம் நாளுக்கு நாள் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறார்.  

   எனவே, கிராம நிர்வாக அலுவலர் முகில், இவரது கணவர் ஏகாம்பரம் ஆகியோர்  மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.