districts

img

திருவையாறு காவிரி ஆற்றில் தூய்மைப் பணி

தஞ்சாவூர், ஜூலை31 -  மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, கல்லணையில் இருந்து புதன்கிழமை தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி ஆற்றில் நீர் வருவதற்கு முன்பாக தூய்மைப் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவையாறு ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில், திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமத் தலைவர் குணசுந்தரம் முன்னிலையில் இப்பணியைத் திருவையாறு பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் சி.நாகராஜன் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, காவிரி ஆற்று மணலில் இருந்த சுமார் 3.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. இதில் மக்கா குப்பைகளான பிளாஸ்டிக், கண்ணாடிப் பொருட்கள் ஏராளமாக இருந்தன.  திருவையாறு பாரதி இயக்கத்தின் பொங்கி வா காவிரி இயக்கம், திருவையாறு பேரூராட்சி நிர்வாகம், திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமம், திருவையாறு அரசர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், திருத்தொண்டர் அறக்கட்டளை உள்ளிட்டவற்றைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானோர் இப்பணியில் ஈடுபட்டனர்.