புதுக்கோட்டை, ஜன.16 - டெல்டா மாவட்டங்களில் செவ்வாயன்று சமத்துவ பொங்கல் வைத்தும், திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தியும் திருவள்ளுவர் தினம் (மாட்டுப் பொங்கல்) கொண்டாடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுக்கோட்டை நகரக்குழு சார்பில் செவ்வாய்க்கிழமை சமத்து வப் பொங்கல் விழா நடை பெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு நடைபெற்ற சமத்து வப் பொங்கல் விழாவிற்கு கட்சி யின் நகரக்குழு உறுப்பினர் ஆர். நிரஞ்சனாதேவி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.நாகராஜன், சு.மதிய ழகன், துரை.நாராயணன், நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.மகாதீர், கட்சியின் நகரக்குழு உறுப்பினர்கள், வாலிபர் சங்க நகரச் செயலாளர் தீபக், வழக்கறி ஞர் ஜெகன் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.
திருவள்ளுவர் சிலைக்கு தமுஎகச மரியாதை
திருவள்ளுவர் தினத்தை முன் னிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் புதுக்கோட்டை மரபுக் கிளை சார்பாக புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு தமுஎகச மரபு கதை தலைவர் எஸ்.பாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் கி.இளஞ்சூரியா வரவேற்றார். திமுக இலக்கிய அணி மாநில துணைத் தலைவர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், தமுஎகச மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர் செல்வன், தொழிலதிபர் அருண் சின்னப்பா, உலகத் திருக்குறள் பேரவை செயலாளர் ராமுக் கண்ணு, காங்கிரஸ் நகரத் தலை வர் இப்ராஹிம் பாபு, பேரா.விஸ்வ நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாபநாசம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் உலக திருக்குறள் மையம் சார்பில் பாபநாசம் வித்யா பாடசாலை வளா கத்திலுள்ள திருவள்ளுவரின் சிலைக்கு மாலையணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இதில் உலகத் திருக்குறள் மையத் தலை வர் மனோகரன், செயலர் ஜெயரா மன், துணைத் தலைவர் ரகுபதி, துணைச் செயலர் குருசாமி, தொழி லதிபர் சிவ லிங்கம், பாபநாசம் பேரூ ராட்சித் தலைவர் பூங்குழலி, திமுக பேரூர் செயலர் கபிலன், கவுன்சி லர் பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்ற னர். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்ற மாணவர் களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மீனவ மக்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய பேராவூரணி எம்எல்ஏ
தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி அருகே மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில், நாட்டுப் படகு மீனவர்கள், விசைப்படகு மீன வர்கள் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு அனைவருக் கும் பொங்கல் வாழ்த்து தெரி வித்தார். தமிழ்நாடு மீனவர் நல வாரிய துணைத் தலைவர் மல்லிப் பட்டினம் தாஜுதீன் முன்னிலை வகித்தார். நாட்டுப்படகு, விசைப் படகு மீனவர்கள், மீனவப் பெண் கள், கிராமத்தினர் திரளாக கலந்து கொண்டனர். இதில் மல்லிப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா பேகம் முகமது அலி ஜின்னா, விசைப்படகு சங்க செயலாளர் இப்ராஹிம், நாட்டுப்படகு சங்க தலைவர் செய்யது முகமது, செய லாளர் ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
சமத்துவ பொங்கல் கொண்டாடிய இஸ்லாமிய பெண்கள்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள வடகரை அரங்கக்குடி மருத்துவ மனைத் தெருவில் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம் சார்பில் செவ் வாயன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றியத் தலைவர் எம்.அனீஸ் ரஹ்மான் தலைமை யில் நடைபெற்ற விழாவில் ஒன்றி யச் செயலாளர் சபீர் அஹமது கொடி ஏற்றி வைத்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.சீனிவா சன், வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் அறிவழகன், மாவட்டத் தலைவர் ஐயப்பன், மயிலாடுதுறை ஒன்றியச் செயலாளர் குமரேசன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் ஆகி யோர் சிறுவர்களுக்கான விளை யாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தனர். இஸ்லாமிய, இந்து, கிறிஸ்தவ பெண்கள் ஒன்றுகூடி பொங்கல் வைத்து வாழ்த்து கூறி னர். முன்னதாக போதைக்கு எதி ரான சுடர் ஓட்டத்தை செம்பனார் கோவில் காவல் ஆய்வாளர் எஸ்.கருணாகரன் துவக்கி வைத்தார். முக்கிய வீதிகளின் வழியாக சென்று வந்த சுடரை, சிங்கப்பூர் தொழிலதிபர் முகமது சுல்தான் பெற்றுக் கொண்டார். விளையாட்டுப் போட்டிகள், பாரம்பரிய விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 200-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் தமி ழர் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இன்சூரன்ஸ் ஊழியர்கள், அறிவியல் இயக்கம்
மதுரை மண்டல பொது இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா திருச்சிராப்பள்ளி மாவட்டம் திரு வெள்ளறை அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் நடை பெற்றது. விழாவிற்கு சங்கத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். விழாவை திருவெள்ளறை ஊராட்சி மன்றத் தலைவர் லதா கதிர் வேல் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணை செயலாளர் முத்துக் குமார், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவர் மாணிக்கத்தாய், மண்ணச்ச நல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக சங்க துணைத் தலைவர் முருகேசன் வரவேற்றார். பொருளாளர் ஆனைமுத்து நன்றி கூறினார்.
தியாகி என்.வெங்கடாசலத்திற்கு தலித் கிறிஸ்தவர்கள் அஞ்சலி
தஞ்சாவூர், ஜன.16 - தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பகுதியில், 50, 60 ஆண்டுகளுக்கு முன்னர் தலித் கிறிஸ்தவர்கள் தை 3, 4 ஆம் தேதிகளில்தான் பொங்கல் வைத்துள்ளனர். தை முதல் நாளில் பொங்கல் வைக்க சாதி ஆதிக்க சக்தியினர் அனுமதி மறுத்தனர். அப்போது, “தைப் பொங்கல் அனைவருக்குமானது. பொங்கல் தினத்தன்று ஏன் அடுத்த வீட்டில் பொங்கல் வாங்கி சாப்பிட வேண்டும். தை 1 ஆம் தேதியே பொங்கல் வைத்து, தானும் பொங்கல் சாப்பிட்டு, மனிதன் மனிதனாக வாழ வேண்டும். யாருக்கும் யாரும் அடிமை இல்லை” என சொல்லி அடிமைச் சங்கிலியை உடைத்தவர். உழைப்பாளி மக்களின் தலைவர் தியாகி என்.வெங்கடாசலம். இதனால் அவரது நினைவிடத்தில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி, திங்களன்று தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.