கும்பகோணம், பிப்.15- பட்டு விற்பனையில் இந்தியாவின் முதன்மை நிறுவனமான திகோசில்க்ஸ் என்றழைக்கப்படும் திருபு வனம் பட்டுக் கைத்தறி நெச வாளர் கூட்டுறவுச் சங்கத்தில் பட்டுத் திருவிழா தொடக்க விழா நடைபெற்றது. மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர் செ.இராமலிங்கம், குத்து விளக்கேற்றி பட்டுத் திரு விழாவை தொடங்கி வைத் தார். கும்பகோணம் சட்ட மன்ற உறுப்பினர் க.அன்பழ கன் முன்னிலை வகித்தார். நிகழ்வில், கடந்தாண்டு நடைபெற்ற பட்டுத் திரு விழாவில் பழைய பட்டுப் புட வைகள்-”பழசுக்குப் புதுசு” திட்டத்தின்கீழ் பங்கு பெற்று பயனடைந்த வாடிக்கையா ளர்களில் குலுக்கல் முறை யில் தேர்வு செய்யப்பட்டவர் களுக்கு முதல் பரிசு ரூ. 25,000, இரண்டாம் பரிசு ரூ. 15,000, மூன்றாம் பரிசு ரூ. 10,000 மதிப்பிலான பட்டுப் புடவைகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பேருராட்சி மன் றத் தலைவர், கூட்டுறவு சங் கங்களின் தலைவர்கள், நிர் வாகக்குழு உறுப்பினர்கள், அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து சங்க மேலாண் இயக்குநர் செல் வம் தெரிவித்ததாவது:- வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப பட்டுத் திருவிழா புதன்கிழமை வருகிற மார்ச் 31- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் புவிசார் குறியீடு பெற்ற 15,000 பட்டுப் புடவைகளின் கண்காட்சி, சோழப்பட்டுப் புடவைகள் அறிமுகம், பழைய வெள்ளி ஜரிகைப் பட்டுப்புடவைகளுக்கு புதிய புடவைகள் (பழசுக்கு புதுசு) விற்பனை, இருபது ஆண்டு களுக்கு முந்தையப் பட்டுச் சேலைகளின் கண்காட்சி, பட்டுப் புடவைகள் தயா ரிப்பது நேரடிப் பார்வை, உங் களது பட்டுச்சேலை வடிவ மைப்புகளை நீங்களே உருவாக்க ஏற்பாடு, பட்டு சேலையில் உள்ள வெள்ளி அளவீட்டை அறியும் வாய்ப்பு, எல்லோருக்கும் பட்டு மாத சேமிப்புத் திட்டம், இணைய வழி விற்பனை தொடக்கம் ஆகிய பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் இப்பட்டுத் திரு விழாவில் இடம் பெறவுள் ளன. பட்டுத்திருவிழாவின் மூலம் சங்கத்தின் 2022-2023 ஆண்டு விற்பனை இலக் கான ரூ.60.00 கோடி-யை அடையத் தேவையான நட வடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது என்றார்.