districts

ரயில்வே அமைச்சர் பதவி விலக தேவையில்லை தேவகவுடா

புதுதில்லி, ஜூன் 6-

    “ஒடிசாவில் ரயில் விபத்து பாதிப்பை அடுத்து அனைத்து தேவையான மீட்பு நடவடிக்கைகளையும் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் எடுத்  துள்ளார். அவர் ஓய்வின்றி பணியாற்றி வருகிறார். விபத்து  பற்றிய விசாரணை நடத்தி முடிக்கப்படட்டும். ரயில்வே  அமைச்சர் முடிந்த வரை சிறப்பாக செய்து வருகிறார். அதனால், இந்த தருணத்தில் ரயில்வே அமைச்சரை பதவி விலகும்படி கோருவது புத்திசாலித்தனமல்ல!” என்று மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி. தேவகவுடா தெரி வித்துள்ளார்.