districts

img

திருவாரூரில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

திருவாரூர், ஜூலை 3 - திருவாரூர் மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தீவிரமாக நடை பெற்று வருகிறது. கொரடாச்சேரி ஒன்றியத்தில் புதன் கிழமை நடைபெற்ற சந்தா சேர்ப்பு இயக்கத்தில் சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி, கொரடாச்சேரி, பத்தூர், குழிக்கரை பெருமாளகரம் உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தகர்கள் மற்றும் பல தரப்பட்ட மக்களிடம் சந்தா  பெற்றார். இதில் சிபிஎம் கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் டி.ஜெயபால், மாவட்ட குழு உறுப்பினர்கள் கே.சீனி வாசன், கே.எஸ்.செந்தில், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செய லாளர் கே.கோபிராஜ் மற்றும் ஒன்றியக்  குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். மன்னார்குடி மன்னார்குடியில் நடைபெற்ற சந்தா சேர்ப்பு இயக்கத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முரு கையன், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள்,  சிஐடியு தோழர்கள் மற்றும் பொது மக்களிடம் தீக்கதிர் ஆண்டு சந்தா சேகரித்தார். சிபிஎம் மன்னார்குடி நகர  செயலாளர் ஜி.தாயுமானவன், சிஐடியு  மாவட்ட துணைத் தலைவர் ஜி.ரகு பதி, தையல் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.ஜெகதீசன் மற்றும் நகரக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். வலங்கைமான் வலங்கைமான் ஒன்றியத்தில் வலங்கைமான், மாணிக்கமங்கலம், நார்த்தங்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற தீக்கதிர் சந்தா  சேர்ப்பு இயக்கத்தில் தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி பங்கேற்றார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.இராதா,  மாவட்டக் குழு உறுப்பினர் கே.சுப்பிர மணியன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் டி.சண்முகம்,  விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் என்.பாலையா மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் சந்தா சேக ரித்தனர்.

;