தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் - சாலியமங்கலம் சாலை முக்கியமானச் சாலையாகும். இந்தச் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலையில் இடையிருப்பு அருகே சாலையோரம் மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருந்தது. இதனால் விபத்து நேரும் முன்பு மின் கம்பத்தை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளதாக தீக்கதிரில் நாளிதழில் செய்தி வெளியானது. தீக்கதிர் செய்தி எதிரொலியாக, இந்த மின்கம்பம் சீரமைக்கப்பட்டது.