விவசாயிகளை புறக்கணித்துள்ள ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து புதனன்று (ஜூலை 31) நாடு முழுவதும் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதனையொட்டி சென்னையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (எஸ்கேஎம்) ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நகல் எரிப்பு போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், தென்சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், எஸ்கேஎம் சென்னை ஒருங்கிணைப்பாளர் மேரி லில்லிபாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.