districts

img

ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தொழிற்சங்கம் டிராக்டர் பேரணி

ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

தஞ்சாவூர், ஜன.27- ஒன்றிய அரசு விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்ற வலியுறுத்தி, டெல்டா மாவட்டங் களில் வெள்ளிக்கிழமை ஐக்கிய விவ சாயிகள் முன்னணி சார்பில் டிராக்டரு டன் பேரணி, ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தில்லியில் விவசாயிகள் தொடர்ச் சியாக நடத்திய போராட்டத்தின் காரண மாக விவசாயிகள் விரோத மூன்று  வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது. திரும்பப் பெற்ற போது ஒன்றிய அரசு விவசாயி களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள்  எதையும் இதுவரை நிறைவேற்ற வில்லை. ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள் சங்கத் தலைவர் களை அழைத்துப் பேசி தீர்வு காண  வேண்டும். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை சட்டமாக்க வேண் டும். மின்சாரத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நூறுநாள் வேலைத் திட்டத்திற்கு தேவையான நிதியை விடுவிக்க வேண் டும். 44 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும். மழை, வெள்ள நிவாரண நிதியை தமிழ்நாட்டுக்கு உட னடியாக வழங்க வேண்டும். காவிரி,  வைகை, குண்டாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஐக்கிய விவசாயி கள் முன்னணி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரு கின்றன. அதனொரு பகுதியாக குடியரசு  தினத்தன்று நாடு முழுவதும் டிராக் டருடன் பேரணி-ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவெடுத்தது. 

அதனடிப்படையில் ஐக்கிய விவசா யிகள் முன்னணி தலைமையில், தமிழ் நாடு விவசாயிகள் சங்கங்கள், விவசா யத் தொழிலாளர் சங்கங்கள், சிஐடியு,  ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங் கள் சார்பில், வெள்ளிக்கிழமை தஞ்சா வூர், திருவாரூர், புதுக்கோட்டை, மயி லாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட் டங்களில் டிராக்டர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தஞ்சாவூர் குந்தவை நாச்சி யார் கல்லூரி எதிரில் உள்ள அரசு  தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டுத் திடலில் இருந்து நூற்றுக்கணக்கான டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் பேரணி, ஐக்கிய விவசாயிகள் முன் னணி ஒருங்கிணைப்பாளர் என்.வி. கண்ணன் தலைமையில் துவங்கியது.  இந்தப் பேரணி பழைய வீட்டு வசதி  வாரிய குடியிருப்பு, மன்னர் சரபோஜி  அரசுக் கல்லூரி, புதிய பேருந்து நிலை யம், பாரத் கலை மற்றும் அறிவியல்  கல்லூரி என முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, மேலவஸ்தாச்சாவடி ரவுண்டானாவில் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், பல்வேறு விவ சாய சங்க தலைவர்கள், அனைத்து  தொழிற்சங்கத்தினர், மாதர் சங்க மாநிலச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வி, மாணவர் சங்க மாநிலச் செயலாளர் அரவிந்த்சாமி, மாவட்டச் செயலாளர் சந்துரு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை 

மயிலாடுதுறையில் டிராக்டர், கார், ஆட்டோ, இரு சக்கரவாகனங்களின் மாபெரும் பேரணி நடைபெற்றது. காவேரி நகர் மேம்பாலத்தில் துவங்கிய பேரணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் எஸ்.துரைராஜ் தலைமை வகித் தார்.  மயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவரும், செந்தில் பைப்ஸ் உரிமையாளருமான விவ சாயி எஸ்.மதியழகன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில  செயற்குழு உறுப்பினர் சாமி.நடராஜன்  பேரணியில் பங்கேற்று டிராக்டரை ஓட்டி வந்தார். 50-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள், ஏராளமான ஆட்டோக்கள், லோடு  வாகனங்கள், இரு சக்கர வாகனங்க ளில் தேசியக் கொடிகளை கட்டிய வாறு, பூக்கடைத்தெரு, அருணா பெட்ரோல் பங்க், கூறைநாடு, காம ராஜர் சாலை, கச்சேரி ரோடு வழியாக வந்த பேரணி கோட்டாட்சியர் அலுவ லகம் முன்பு நிறைவடைந்தது. இப்பேர ணிக்கு கடை வியாபாரிகள், பொது மக்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கோட்டாட்சியர் அலு வலகம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில செயற்குழு உறுப்பினர் சாமி.நடராஜன் பேரணியை  முடித்து வைத்து சிறப்புரையாற்றி னார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர்(சிபிஐ) பி. வீரராஜ், டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் ஆர்.அன்பழகன், இயற்கை விவசாயி அ.ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் டிராக்டர்  மற்றும் இருசக்கர வாகன பேரணி எழுச்சியாக நடைபெற்றது. பேரணிக்கு  ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங் கிணைப்பாளர் பி.எஸ்.மாசிலாமணி தலைமை வகித்தார்.  அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்க மாநில பொதுச் செயலா ளர் வீ.அமிர்தலிங்கம், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.சேகர், தலைவர் எஸ்.தம்புசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி, சிஐடியு மாவட்ட தலைவர் எம்.கே.என்.  அனிபா, ஏஐடியுசி மாவட்டச் செயலா ளர் சந்திரசேகர ஆசாத், மக்கள் அதி காரம் ஒருங்கிணைப்பாளர் சண்முக சுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  இந்த மாபெரும் டிராக்டர்-இரு சக்கர வாகன பேரணி, திருவாரூர் புதிய  பேருந்து நிலையம் அருகிலிருந்து புறப்பட்டு, விளமல் கல் பாலம் வழி யாக தெற்கு வீதி, பனங்கல் சாலை, பழைய பேருந்து நிலையம் கடந்து புதிய ரயில் நிலையம் அருகே நிறைவு  பெற்றது. இந்திய விவசாயிகள், விவசாயத்  தொழிலாளர்கள் மற்றும் தொழிலா ளர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை  கண்டித்து, ஐக்கிய விவசாய முன்னணி  அமைப்பின் தலைவர்கள் உரை யாற்றினர். முன்னதாக சிபிஎம் மாவட் டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, சிபிஐ  மாவட்டச் செயலாளர் வை.செல்வ ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  நிறைவாக, “இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாத்திடுவோம், சமத்துவ  ஜனநாயக கோட்பாடுகளை பாது காத்திடுவோம், வேற்றுமையில் ஒற்றுமை தொடர இந்தியாவை காப்போம், இந்திய விவசாயத்தை காப்போம்” என உறுதிமொழி ஏற்கப் பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா  அருகில் விவசாயிகள் டிராக்டருடன் பேரணி நடத்துவதற்குத் தயாரா னார்கள். ஆனால், பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்கு வாதம் நடந்தது. தொடர்ந்து டிராக்டரு டன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய விவ சாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் மு.மாதவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலை வர் கே.முகமதலி கண்டன உரையாற்றி னார். கோரிக்கைகளை விளக்கி இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஜி.எஸ்.தனபதி, விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பொன் னுச்சாமி மற்றும் நிர்வாகிகள் க. சுந்தர்ராஜன் பேசினர்.