தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியில் குடிநீர் முறையாக வரவில்லை என அப்பகுதி பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து, மேயர் ஜெகன் பெரியசாமி அப்பகுதியை ஆய்வு செய்தார். பின்னர் அவர், புதிய வழித்தடத்தில் அந்தப் பகுதிகளில் குடிநீர் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.