திருச்சிராப்பள்ளி, டிச,12, திருச்சி மாநகராட்சி 16-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மதிவாணன் அலுவல கம் மற்றும் வார்டு மக்கள் அரசு சான்றிதழ் பெற இ-சேவை மையம் திறப்பு விழா திங்க ளன்று நடைபெற்றது. மண்டல தலைவரும், 16- வது வார்டு மாமன்ற உறுப்பினருமான மதிவாணன் முன்னிலை வகித்தார். தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் யாமொழி கவுன்சிலர் அலுவலகம் மற்றும் இ.சேவை மையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், அப்துல் சமது, துணை மேயர் திவ்யா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.