அறந்தாங்கி, ஜூலை 20 - புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி தாலுகா ஊர்வணி ஊராட்சிக்குட் பட்ட ஆலங்குடி கிராமத்தில் ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டுகளை கடந்த நிலை யில், இந்த மக்களுக்கு சாலை வசதி இல்லாததால் தவித்து வந்தனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து பலமுறை மனுக்கள் அளித் தும் எந்த ஒரு பயனும் இல்லை. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஊர்வணி ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டி யிட்ட ஏகாம்பாள் சந்திர மோகனிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தேர்தலில் வெற்றி பெற்று ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற் றுள்ள ஏகாம்பாள் சந்திரமோ கன், பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்றுவதற்காக பல அரசு அதிகாரிகளை நேரி லும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு பலமுறை மனுக்கள் அளித்தார். இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்த கிராம மக்களை நேரில் அழைத்து, அறந் தாங்கி வட்டாட்சியர் திரு நாவுக்கரசு முன்னிலையில் சமாதானம் கூட்டம் நடத்தி னார். அதில், “விரைவில் சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும்” என உறுதி அளித்தார். பல போராட்டங்களுக் குப் பிறகு சனிக்கிழமை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமையில், ஆதிதிரா விடர் மக்களுக்கு புதிய சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது. நூறு ஆண்டு களாக சாலை வசதி இல்லா மல் தவித்த கிராம மக்களுக் காக, சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு வதற்கு வந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஏகாம்பாள் சந்திரமோகன் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன் ஆகியோ ருக்கு அப்பகுதி மக்கள் மலர் தூவி வரவேற்றனர்.