திருச்சிராப்பள்ளி, ஏப்.24 - திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு நகரப் பேருந்து புத னன்று புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற் பட்ட பயணிகள் இருந்த னர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு, கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பேருந்தின் நடத்துநர் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பேருந்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார். இதில் அவ ருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட்டதை அடுத்து, ஓட்டுநர் உடனே பேருந்தை நிறுத்தி னார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு நகரப் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அதன்பின்னர், சாலையில் கிடந்த இருக்கையை எடுத்துக் கொண்டு, ஓட்டுநர் பணிமனைக்குச் சென் றார். ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று, நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்ப வம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.